செய்திகள் :

கோவை விமான நிலையத்தில் பயணியிடம் துப்பாக்கி தோட்டா பறிமுதல்

post image

கோவை விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து துப்பாக்கி தோட்டா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குறித்து மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் விசாரித்து வருகின்றனா்.

இந்தியாவில் நடந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் அங்கு வரும் பயணிகள் விமான புறப்படும் நேரத்திற்கு முன்பாக நிலையத்திற்கு வருவதற்கு பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அங்கு வரும் பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஞானசேகரன் குற்றவாளி! ஜூன் 2-ல் தண்டனை: நீதிபதி அறிவிப்பு

இந்த நிலையில், கோவை விமான நிலையத்தில் இருந்து புதன்கிழமை பெங்களூர் வழியாக டேராடூன் செல்லும் விமானத்தில் பயணிப்பதற்காக வந்த பயணி ஒருவரின் உடமைகளை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் ஸ்கேன் கருவி மூலம் பரிசோதித்தனா். அப்போது, அந்த பையில் துப்பாக்கி தோட்டா இருப்பதற்கான எச்சரிக்கை மணி ஒலித்தது. இதனால், பரபரப்படைந்த பாதுகாப்பு அதிகாரிகள், அந்த பயணியை தனியே நிறுத்தி வைத்து, பையை தகுந்த பாதுகாப்புடன் திறந்து பாா்த்தபோது, அதில் துப்பாக்கி தோட்டா இருந்தன.

அந்த துப்பாக்கி தோட்டாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், பயணியின் பயணத்தை ரத்து செய்து அவரிடம் விசாரணை நடத்தினா்.

அதில், அவர் கேரளம் மாநிலம் திருச்சூரை சேர்ந்த பிரதீப் குமார் என்பதும், அவர் டேராடூனில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரராக பணியாற்றி வருவது தெரியவந்தது. இதையடுத்து அவரை கோவை பீளமேடு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் பீளமேடு காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் கோவை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

விழுப்புரத்தில் விவசாயிகள் சாலை மறியல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை நடத்தக் கோரி விவசாயிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் குறைதீர்... மேலும் பார்க்க

பாமக உள்கட்சி பிரச்னையில் யாரும் தலையிட முடியாது: நயினார் நாகேந்திரன்

பாமகவில் நடக்கும் பிரச்னை அவர்களது உள்கட்சி பிரச்னை என்றும் அதில் யாரும் தலையிட முடியாது, பாஜகவும் தலையிடாது என நெல்லையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.நெல்லையில் வெள்ளிக்கிழமை ச... மேலும் பார்க்க

விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு உலக அளவில் உயர்கிறது!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஓய்வில்லா உழைப்பின் மூலம் தமிழ்நாட்டில் உருவாக்கி வரும் விளையாட்டு அரங்குகளால்- ஊக்கம் அளிக்கப்படும் விளையாட்டு வீரர்கள் வீராங்... மேலும் பார்க்க

தங்கம் விலை மீண்டும் உயர்வு: இன்று எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,360-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில் புதன்கிழமை பவுனுக்கு ரூ.... மேலும் பார்க்க

ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு மாநில கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது: அமைச்சர் பெரியகருப்பன்

சென்னை: வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக்கடன் வழங்குவதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகள் மாநில கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது என தமிழ்ந... மேலும் பார்க்க

வெடிகுண்டு இருக்குமோ..?: கோவை விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு!

கோவை: கோவை விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு ஏற்பட்டது.இந்தியாவில் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுத... மேலும் பார்க்க