செய்திகள் :

கோவை: ஷோரூமில் நின்ற சொகுசு காரை கண் இமைக்கும் நேரத்தில் திருடிய நபர்; சிக்கியது எப்படி?

post image

கோவை, சிங்காநல்லூர் திருச்சி சாலையில் டாடா நிறுவனத்தின் கார் விற்பனை மையம் உள்ளது.

அங்குப் பணியாற்றி வரும் சரவணக்குமார் என்ற ஊழியர், கார்களை ஆய்வு செய்தபோது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான ஒரு கார் மாயமானது தெரியவந்தது.

உடனடியாக சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, ஒரு மர்ம நபர் காரை திருடிச் சென்றது தெரிந்தது.

கார்
கார்

இதுகுறித்து சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த நபரைப் பிடிப்பதற்காகத் தனிப்படையும் அமைக்கப்பட்டது.

காவல்துறையினர் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, அந்த நபர் விற்பனை மையத்தின் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் தன் பைக்கை நிறுத்திச் சென்றது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, காவல்துறையினர் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம், “இந்த பைக்கை யாராவது எடுக்க வந்தால் எங்களுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

கர்ணன்
கர்ணன்

நேற்று மாலை அந்த நபர் பெட்ரோல் பங்குக்கு பைக் எடுக்க வந்துள்ளார். பங்க் ஊழியர்கள் அவரைப் பிடித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

காவல்துறையினர் அவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதில் அந்த நபர் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கந்து கவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்த கர்ணன் என்று தெரிந்தது.

அவர் பைக் டாக்ஸி ஓட்டி வரும் நிலையில், கடந்த வாரம் டாடா விற்பனை மையம் சென்று TATA Curvv மின்சார வாகனம் வாங்குவது போல விசாரித்துள்ளார்.

அந்த காரை ஓட்டிப் பார்த்து விரைவில் வாங்குவதாகக் கூறியுள்ளார். காரின் மதிப்பு ரூ.20 லட்சமாகும். அதை வாங்குவதற்கான பணம் இல்லை.

கைது
கைது

இதனால் காரை திருட முயற்சி செய்து, விற்பனை மையம் வந்து காரை பார்த்தார். அதில் சாவியும் இருந்தது. அவர் ஏற்கனவே கார் குறித்து விசாரித்துச் சென்றதால் அங்கிருந்தவர்களுக்குச் சந்தேகம் வரவில்லை. இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட கர்ணன், காரை திருடிச் சென்றுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

புதின்-ஜெலன்ஸ்கி வாக்குவாதம் தீவிரம்; ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபக்கம்... தாக்குதல்கள் ஒரு பக்கம்... என ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தாக்குதல்களும், பதில் தாக்குதல்களும் நடந்துகொண்டே இருக்கின்றன. இந்த நிலையில், ரஷ்... மேலும் பார்க்க

PMK: "விரைவில் நல்ல செய்தி; ஆடிட்டர் குருமூர்த்தியுடனான சந்திப்பு..." - ஜி.கே மணி சொல்வது என்ன?

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. அன்புமணி ஆதரவாளர்களான பாமக பொருளாளர் திலகபாமா உட்பட 41 மாவட்ட நிர்வாகிகளைக் கட்சியில் இருந்து நீக்கி ராமதாஸ் உத்த... மேலும் பார்க்க

பேராவூரணி தொகுதி திமுக வேட்பாளர் ரேஸ்: முந்தப்போவது யார்? - மல்லுக்கட்டும் மாமன், மச்சான்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் எட்டு சட்டமன்ற தொகுதிகளில் கடந்த தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியை தவிர மற்ற ஏழு தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கைப்பற்றின. இந்த நிலையில், திமுக மேலிடம், தொகுதி வாரியாக எ... மேலும் பார்க்க

PMK 'ராமதாஸ், அன்புமணி இடையே சமாதானம் ஏற்பட்டிருக்கு, நல்ல செய்தி’ - அரசியல் குழு தலைவர் தீரன்

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. அன்புமணி ஆதரவாளர்களான பாமக பொருளாளர் திலகபாமா உட்பட 41 மாவட்ட நிர்வாகிகளைக் கட்சியில் இருந்து நீக்கி ராமதாஸ் உத்த... மேலும் பார்க்க

"என்னுடைய ரூ.14,000 கோடியை... நான்தான் பாதிக்கப்பட்டவன்" - வங்கிகள் மீது விஜய் மல்லையா புகார்

விஜய் மல்லையா - இந்தப் பெயரை இந்தியாவில் எவரும் எளிதாக மறந்துவிட மாட்டார்கள். கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல பிசினஸ்களைச் செய்து வந்த பிசினஸ்மேன் வங்கிகளில் தான் வாங்கிய கடனை அடைக்காமல் வெளிநாட்டிற்... மேலும் பார்க்க

Trump Vs Musk : 'ட்ரம்ப் பற்றி ஒரு உண்மையைச் சொல்லியாக வேண்டும்!' - பகீர் கிளப்பும் எலான் மஸ்க்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், ட்ரம்பின் நண்பருமான எலான் மஸ்க் நட்பில் விரிசல் உண்டாகி உள்ளது.இருவருக்கும் சமூக வலைதளத்தில் வார்த்தைப் போர் முற்றி வருகிறது. அதில் ஒன்றா... மேலும் பார்க்க