க்ளென்மார்க் பார்மா பங்குகள் 10% உயர்வுடன் நிறைவு!
புது தில்லி: புற்றுநோய் மற்றும் தன்னுடல் தாக்க நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக $2 பில்லியன் வரையிலான ஒப்பந்தத்தில் அப்பிவி (AbbVie) உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக க்ளென்மார்க் பார்மா நிறுவனம் தெரிவித்ததையடுத்து, அதன் பங்குகள் 10 சதவிகிதம் வரை உயர்ந்தன. இது மருந்துத் துறையில் மிகப்பெரிய பரிவர்த்தனைகளில் ஒன்றாகும் என தெரியவந்துள்ளது.
பிஎஸ்இ-யில் நிறுவனத்தின் பங்குகள் 9.99% உயர்ந்து அதன் 52 வார உச்சத்தை பதிவு செய்தது. பங்கின் விலை ரூ.2,095.65 என்ற உச்ச சுற்று வரம்பை எட்டியது.
நிஃப்டி-யில் நிறுவனத்தின் பங்கு 10% உயர்ந்து ரூ.2,094.40 ஆக முடிந்தது. இது அதன் 52 வார உச்ச வரம்பின் நிலையாகும்.
இதையும் படிக்க: அமெரிக்க வரி விதிப்பால் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை!