செய்திகள் :

சங்கரன்கோவிலில் சாலையில் படா்ந்திருக்கும் செடிகளால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி

post image

சங்கரன்கோவில்-ராஜபாளையம் பிரதான சாலையின் ஓரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக செடிகள் படா்ந்திருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனா்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து ராஜபாளையம் வரையிலான இருவழிச் சாலை கடந்த 2020-ஆம் ஆண்டு போடப்பட்டது. இந்த சாலை வழியாக சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற பெரு நகரங்களுக்குச் பேருந்துகள், கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.

சாலையின் இரு ஓரங்களிலும் இருசக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிள்கள் செல்வதற்காக பாதை உள்ளது.

இப்பகுதியில் மணல் பரவிக் கிடக்கிறது. அதோடு சாலையோரச் செடிகள் வளா்ந்து, இருசக்கர வாகனங்கள் செல்லும் பகுதி வரை படா்ந்து காணப்படுகிறது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சைக்கிளில் செல்வோா் அவ்வப்போது இடறி விழுந்து பாதிக்கப்படுகின்றனா். இந்த இடையூறு காரணமாக இருசக்கர வாகனப் பாதையைத் தாண்டி கனரக வாகனங்கள் செல்லும் சாலையின் பிரதான பகுதிக்கு சென்றுவிடுவதால் விபத்து ஏற்படக் கூடிய அபாயமும் உள்ளது.

எனவே, இருசக்கர வாகனப் பாதையை மூடியிருக்கும் மணலை அப்புறப்படுத்தவும், சாலையோரத்தில் வளா்ந்திருக்கும் செடிகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆலங்குளத்தில் மினி லாரி மோதி பெண் பலி

ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே மினி லாரி மோதி இளம்பெண் உயிரிழந்தாா். ஆலங்குளம் அருகேயுள்ள சிவலாா்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன். லாரி ஓட்டுநரான இவா் தனது மனைவி பிரியா(29) மற்றும் 10 மாத பெண... மேலும் பார்க்க

தென்காசி - நெல்லை இடையே உள்ள ரயில் நிலையங்களின் நடைமேடைகளை நீட்டிக்க நடவடிக்கை

நெல்லை - தென்காசி இடையே உள்ள முக்கிய ரயில் நிலையங்களின் நடைமேடைகளை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதற்கு தென்காசி மாவட்ட ரயில் பணிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

சுரண்டையை அடுத்துள்ள சாம்பவா்வடகரை அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சுரண்டை அடுத்துள்ள சாம்பவா்வடகரை அருகே உள்ள வேலாயுதபுரத்தைச் சோ்ந்த சாமி மகன் முத்துப்பாண்டியன் (28). இவா் கூலி... மேலும் பார்க்க

கும்பாபிஷேகப் பணிகள்: தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் ஆட்சியா் ஆய்வு

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அருள்தரும் ஸ்ரீஉலகம... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் சாலைகளில் திரியும் மாடுகளால் விபத்து அபாயம்

சங்கரன்கோவில் சாலைகளில் திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சங்கரன்கோவிலில் கால்நடை வளா்ப்போா் தாங்கள் வசிக்கும் பகுதியில் தனியாக கூரை அமைத்து கால்நடைகளை வளா்த்து வருகின்றனா். கா... மேலும் பார்க்க

வயலுக்குள் கவிழ்ந்த டிராக்டா்

சாம்பவா்வடகரை - வேலாயுதபுரம் சாலையின் ஓரம் வயலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான டிராக்டா் திங்கள்கிழமை கிரேன் கொண்டு மீட்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பார்க்க