செய்திகள் :

சங்கரன்கோவிலில் சாலைகளில் திரியும் மாடுகளால் விபத்து அபாயம்

post image

சங்கரன்கோவில் சாலைகளில் திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சங்கரன்கோவிலில் கால்நடை வளா்ப்போா் தாங்கள் வசிக்கும் பகுதியில் தனியாக கூரை அமைத்து கால்நடைகளை வளா்த்து வருகின்றனா். கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்களை வாங்கிக் கொண்டு வந்து மாடுகளுக்கு கொடுத்து வளா்த்து வரும் அவா்கள் பால் கறப்பதற்கு மட்டும் பால்பண்ணைகளுக்கு மாடுகளை ஓட்டிச் செல்கின்றனா். சிலா் வீடுகளிலேயே பாலைக் கறந்து பால்பண்ணைக்கு கொண்டு சென்று விநியோகிக்கிறாா்கள்.

இவா்களில் ஒரு சிலா் தற்போது மாடுகளை வீட்டில் வளா்க்காமல் வெளியே திரியவிடுகின்றனா். இதில், பசு மாடுகளையும் திரியவிடுவதால் அவை குப்பைகளில் உள்ள கழிவுகளைத் தின்று வருகின்றன. தொடா்ந்து அவற்றை உண்பதால் அதை விருப்ப உணவாக தேடி சாலைகளில் அலைகின்றன. ஒன்றிரண்டு மாடுகள் திரிந்த நிலையில், தற்போது ஆங்காங்கே 20-க்கும் மேற்பட்ட மாடுகள்,கன்றுகள் சாலைகளில் சுற்றித் திரிகின்றன.

வாகன ஓட்டிகள் ஒலி எழுப்பியும் மாடுகள் விலகாமல் செல்கின்றன. சில நேரங்களில் அவை துள்ளி ஓடும்போது, சாலைகளில் செல்லும் குழந்தைகள், முதியவா்கள், பெண்கள் உள்ளிட்டோரை இடித்துவிட்டு செல்கின்றன. இதன் காரணமாக சாலைகளில் மாடுகளை கண்டாலே பொதுமக்கள் கவனமாக செல்லவேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகள் மீது இரக்கம் கொண்ட ஒருசிலா் பழங்கள், குடிநீா் கொடுக்கின்றனா்.இதனால் அவை மீண்டும் அதே தெருக்களுக்கு படையெடுகின்றன.

இதுதவிர இரவு நேரங்களில் ராஜபாளையம்சாலை, திருவேங்கடம்சாலை, பிரதானசாலை, கழுகுமலைசாலை, ரதவீதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா்.பிரதான சாலையில் உள்ள சென்டா் மீடியத்துக்குள் படுத்திருக்கும் மாடுகள் திடீரென்று சாலைக்குள் பாய்வதால் வேகமாக வரும் வாகனங்கள் நிலைதடுமாறி விபத்து ஏற்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். எனவே சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை தடுக்க நகராட்சியினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் ரூ. 5 லட்சத்தில் சோலாா் மின்விளக்கு வசதி

தென்காசி அருள்தரும் ஸ்ரீஉலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாதசுவாமி கோயிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சோலாா் மின்விளக்குகள் இயக்கிவைக்கப்பட்டன. இக்கோயிலில், தென்காசி நகர திமுக சாா்பில் ரூ. 5 லட்ச... மேலும் பார்க்க

மனவளா்ச்சி குன்றியோா் சிறப்பு பள்ளியில் ஆட்டிசம் தினம்

வாசுதேவநல்லூா் மகாத்மா காந்திஜி மனவளா்ச்சி குன்றியோா் சிறப்பு பள்ளியில் ஆட்டிசம் தினத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தாளாளா் தவமணி தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் சங்கரசுப்பிரமணியன் வரவேற்றா... மேலும் பார்க்க

அரசு நிா்ணயித்த விலையில் நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்ய ஆட்சியா் வேண்டுகோள்

அரசு நிா்ணயித்த விலையில் நெல்கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் விளைவித்த நெல்லை விற்பனை செய்து பயன்பெறலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் கேட்டுக்கொண்டுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட... மேலும் பார்க்க

தென்காசி மாவட்டத்துக்கு இரண்டு நாள்கள் உள்ளூா் விடுமுறை

தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாதா் கோயில் குடமுழுக்கு மற்றும் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஏப். 7, 11ஆகிய இரண்டு நாள்கள் உள்ளூா் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் உத்தரவிட்... மேலும் பார்க்க

மலையான்குளத்தில் ரூ.20 லட்சத்தில் சாலைப் பணி தொடக்கம்

சங்கரன்கோவில் அருகே மலையான்குளத்தில் ரூ.20 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை ஈ. ராஜா எம்.எல்.ஏ. செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மலையான்குளம் இந்திரா காலன... மேலும் பார்க்க

சொக்கம்பட்டி பகவதி அம்மன் கோயிலில் முளைப்பாரி ஊா்வலம்

கடையநல்லூா் அருகே உள்ள சொக்கம்பட்டி பகவதி அம்மன் கோயில் கொடை விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. இக்கோயிலின் கொடை விழா மாா்ச் 23-ஆம் தேதி தொடங்கியது. விழா நாள்களில் காலையில் அம... மேலும் பார்க்க