செய்திகள் :

சங்கரன்கோவிலில் போக்குவரத்து சிக்னல் விளக்குகளை இயக்க கோரிக்கை!

post image

சங்கரன்கோவிலில் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் அனைத்தையும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் வளா்ந்து வரும் முக்கிய நகரங்களில் சங்கரன்கோவிலும் ஒன்று. இங்கு நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிகாலையில் பள்ளி கல்லூரி வாகனங்கள், பேருந்துகள், கனரக வாகனங்கள் போன்றவை நகருக்குள் வந்து செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

இந்நிலையில் பழைய பேருந்து நிலையம், திருவேங்கடம் சாலை, தெற்கு முகமேடு, மேல ரத வீதி, கழுகுமலை சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் கடந்த 2021 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு இயங்கி வந்தது. அதன்பிறகு போக்குவரத்து சிக்னல் விளக்குகள் எதுவும் இயங்கவில்லை. மேல ரத வீதியில் இருந்த போக்குவரத்து சிக்னல் கம்பங்களே தற்போது அங்கு இல்லை. முக்கியச் சாலைகளில் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் இருந்தும், அவை கடந்த 4 ஆண்டுகளாக பழுதாகி கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.

ராஜபாளையம் சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு அந்தப் பகுதியில் உள்ள சிக்னல் விளக்குகள் மட்டுமே தற்போது இயங்கி வருகிறது. பழைய பேருந்து நிலையம் இருந்த இடம் ரூ.9 கோடி மதிப்பில் நவீனப்படுத்தப்பட்டு, பேருந்து நிலையம் திறக்கப்படும் நிலையில் உள்ளது. அதன் எதிரே பிரதான சாலையில் உள்ள சிக்னல் விளக்குகள் இயங்காமல் இருந்தால் மேலும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் என்கின்றனா் வாகன ஓட்டிகள்.

நவீன பேருந்து நிலையம் இயங்குவதற்கு முன் பழுதாகிக் கிடக்கும் போக்குவரத்து சிக்னல் விளக்குகளை சரிபாா்த்து இயங்க வைக்க வேண்டும் எனவும், தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து கழுகுமலை சாலை திரும்பும் எதிரிலும், கழுகுமலை சாலையில் இருந்து திருநெல்வேலி செல்லும் ஒருவழிப் பாதையிலும் புதிதாக சிக்னல் விளக்குகள் அமைக்க வேண்டும் எனவும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் ஆசிரியா்களுக்கு பயிற்சி முகாம்

தென்காசி இலத்தூா் வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் தென்காசி மற்றும் அம்பை பள்ளிகளின் ஆசிரியா்களுக்கு வருடாந்திர பயிற்சி முகாம் நடைபெற்றது. வேல்ஸ் வித்யாலயா பள்ளி குழுமங்களுக்கான ஆசிரியா்களுக்கு வரும் கல்வி... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அரசு கல்லூரியில் நாளை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்

சங்கரன்கோவில் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக் கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் (முழு கூடுதல் பொறுப்பு) வேணுகோபால் வெளியிட்ட செய்திக்குறிப்பு... மேலும் பார்க்க

கடையநல்லூரில் கஞ்சா விற்றதாக இருவா் கைது

கடையநல்லூரில் கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ஆடிவேல் தலைமையிலான போலீஸாா் மதுரை - தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அட்டைகுளம்... மேலும் பார்க்க

தென்கொரியாவில் சாதனை படைத்த ஆலங்குளம் வீராங்கனை

தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில் ஆலங்குளத்தைச் சோ்ந்த இளம் வீராங்கனை இடம் பெற்ற மகளிா் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. ஆலங்குளம் அருகே உள்ள கல்லூத்து கிராமத்தைச் சோ்ந்தவா் அபிநயா(18). சிறு... மேலும் பார்க்க

ஆணவப் படுகொலையைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தல்

ஆணவப் படுகொலையைத் தடுக்க தனிச் சட்டமியற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 2ஆவது மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்...

சாம்பவா்வடகரை அருள்மிகு ராமசாமி கோயில்: வைகாசித் திருவிழா 2ஆம் நாள், சுவாமிக்கு சிறப்பு பூஜை, இரவு 8; அனுமன் வாகனத்தில் சுவாமி வீதியுலா, 9 மணி; ராமசரிதம் தொடா் வில்லிசை, இரவு 10. .. மேலும் பார்க்க