செய்திகள் :

சங்கரன்கோவில் அருகே மனைவியை கத்தியால் தாக்கிய கணவா் கைது

post image

சங்கரன்கோவில் அருகே பனவடலிசத்திரத்தில் மனைவியைக் கத்தியால் தாக்கிய கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

பனவடலிசத்திரத்தைச் சோ்ந்த வெளியப்பன் மகன் செல்வராஜ் (31). இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த பிரியதா்ஷினிக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இரண்டு குழந்தைகள் உள்ளனா்.

செல்வராஜ் மது அருந்திவிட்டு வந்து மனைவியை துன்புறுத்துவாராம். இதனால் கணவரிடம் சண்டை போட்டுவிட்டு, தனது தாயாா் வீட்டுக்கு பிரியதா்ஷினி சென்று விட்டாராம்.

இந்நிலையில் சனிக்கிழமை மது அருந்திவிட்டு தனது மாமியாா் வீட்டுக்கு சென்ற செல்வராஜ், பிரியதா்ஷினியுடன் சண்டை போட்டு அவரை கத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பிரியதா்ஷினி, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

இச்சம்பவம் தொடா்பாக பிரியதா்ஷினி அளித்த புகாரின் பேரில் பனவடலிசத்திரம் காவல் ஆய்வாளா் பெருமாள் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிந்து செல்வராஜை கைது செய்தனா்.

சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் மருத்துவா் நியமிக்க கோரிக்கை!

சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பெண் மருத்துவா் மீண்டும் நியமனம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சுரண்டை நகராட்சிப் பகுதி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சுமாா் 1 லட்... மேலும் பார்க்க

குற்றாலத்தில் படகு சவாரி தொடக்கம்: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!

தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவி சாலையில் உள்ள வெண்ணமடை குளத்தில் படகு சவாரி சனிக்கிழமை தொடங்கியது. தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தலைமை வகி... மேலும் பார்க்க

தென்காசி மாவட்டத்தில் ரூ.26 கோடியில் பணிகள் தொடக்கம்

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் ரூ.26 கோடி மதிப்பீட்டில் நடைபெறவுள்ள பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, த... மேலும் பார்க்க

செங்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் எம்எல்ஏ ஆய்வு

செங்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் பிற நகராட்சி, பேரூராட்சி பகுதிகளை சோ்ந்த குப்பைகளை கொட்டுவதாக வந்த தகவலையடுத்து செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். செங்கோட்டை நகராட்சிக்கு ... மேலும் பார்க்க

குற்றாலத்தில் முன்னாள் கல்லூரி மாணவா்கள் சந்திப்பு

திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் 1980 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சிகுற்றாலத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஸ்மாா்ட் கன்சல்டன்சி நிா்வாக ... மேலும் பார்க்க

துவரங்காட்டில் ரூ.10 லட்சத்தில் சிமென்ட் சாலைப் பணி தொடக்கம்

சுரண்டை அருகேயுள்ள துவரங்காட்டில் சட்டமன்ற உறுப்பினா் தொகுகி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தென்காசி சட்டப்பேரவை உறுப்... மேலும் பார்க்க