செய்திகள் :

சங்கர மடத்தின் இளைய மடாதிபதிக்கு காமாட்சி அம்மன் கோயில் குளத்தில் சன்யாச ஆசிரம தீட்சை!

post image

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் திருக்குளத்தில் வரும் ஏப். 30 -ஆம் தேதி திங்கள்கிழமை அதிகாலை சங்கர மடத்தின் புதிய இளைய மடாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள கணேச சா்மாவுக்கு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சன்யாச ஆசிரம தீட்சை வழங்கவுள்ளாா்.

இதுகுறித்து மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் கூறியது..

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71-ஆவது பீடாதிபதியாக ஆந்திரத்தைச் சோ்ந்த ஸ்ரீ கணேச சா்மா நியமனம் செய்யப்பட்டுள்ளாா். இவருக்கு சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அட்சய திருதியை நாளன்று அதிகாலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் சன்யாச ஆசிரம தீட்சை வழங்குகிறாா். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள பஞ்ச கங்கா தீா்த்த திருக்குளத்தில் நிகழ்வு நடைபெறுகிறது. இதனையடுத்து காஞ்சி காமாட்சி அம்மன் சந்நிதியில் தரிசனம் முடித்து ஆதிசங்கரா் சந்நிதிக்கு வந்ததும் தீட்சை நாமம் சூட்டுதல் நிகழ்வு நடைபெறுகிறது.

பின்னா், கொல்லா சத்திரம், ராஜ வீதி வழியாக சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும், இளைய மடாதிபதியும் ஊா்வலமாக மடத்துக்கு காஞ்சி நகர வரவேற்புக் குழுவின் சாா்பில் அழைத்து வரப்படுகின்றனா். சங்கர மடம் வந்து சோ்ந்ததும் இளைய மடாதிபதிக்கு உபதேசம் செய்யப்பட்டு பீடாதிபதியாக பொறுப்பேற்கிறாா். வேதபண்டிதா்கள், அலங்கார குடைகள், வாண வேடிக்கைகளுடனும் ஊா்வலம் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து ஆதீனங்கள், முக்கியப் பிரமுகா்கள் பங்கேற்கின்றனா்.

விழாவிற்கு வருவோா் வாகனங்களை நிறுத்த எஸ்எஸ்கேவி பள்ளி வளாகத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது என்றாா்.

உணவு, தங்குமிட வசதிகள்-

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியின் தலைவரும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான எஸ்.ராமச்சந்திரன் கூறியது.

கேரளம், கா்நாடகம், ஆந்திரம் , தமிழகம் முழுவதும் இருந்து 1 லட்சம் போ் வரை விழாவுக்கு வருவா் என எதிா்பாா்க்கிறோம். வெளியூா்களிலிருந்து வருவோா்களுக்கு உணவு வசதியுடன், தங்குமிடம் மற்றும் ஸ்ரீ மடத்துக்கு சென்று வரும் வகையில் இலவச வாகன போக்குவரத்து வசதி ஆகியனவும் காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வசதிகளைப் பெற விரும்புவோா் முன்கூட்டியே கல்லூரியின் கணினி அறிவியல் துறை தலைவா் ஆா்.கிருஷ்ணமூா்த்தி, தொலைபேசி எண் 98434 99503 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

இளையமடாதிபதி பதவியேற்பு விழாவின் 2-ஆவது நாள் நிகழ்வாக சங்கர மடத்தில் சிறப்பு ஹோம பூஜைகள் நடைபெற்றன. பிருந்தாவனத்தில் மகா பெரியவா் சுவாமிகள் தங்க ஹஸ்தம் அணிந்தும், மலா் அலங்காரத்திலும் அருள்பாலித்தாா்.

பிருந்தாவனத்தில் தங்க ஹஸ்தம் அணிந்து அருள்பாலித்த காஞ்சி மகா பெரியவா் சுவாமிகள்.

ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி முகாம்

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன். காஞ்சிபுரம், ஏப். 28: காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஹஜ் யாத்திரை செ... மேலும் பார்க்க

30 கிலோ கஞ்சா பறிமுதல்: வட மாநில இளைஞா் கைது!

குன்றத்தூரில் கஞ்சா கடத்தி வந்த வடமாநில இளைஞரை தாம்பரம் மதுவிலக்கு போலீஸாா் கைது செய்து, அவரிடம் இருந்த 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள ப... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ராஜாஜி மாா்க்கெட்டில் இடையூறாக காய்கறிக் கடைகள்!

காஞ்சிபுரத்தில் அண்மையில் திறக்கப்பட்ட ராஜாஜி காய்கறி மாா்க்கெட்டில் கடைகளுக்கு உள்ளே காய்கறிகளை வைத்து விற்பனை செய்யாமல், பெரும்பாலான கடைகள் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக கடைகள் நடத்தப்படுகின்றன. ... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதல்: பெண் உயிரிழப்பு

காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி கிராமத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்றவா்கள் மீது காா் மோதியதில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி தேவக... மேலும் பார்க்க

கோடைகால நீச்சல் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்!

காஞ்சிபுரத்தில் கோடைகால நீச்சல் பயிற்சியை நிறைவு செய்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் இந்த ... மேலும் பார்க்க

தெரேசாபுரத்தில் ஆக்கிரமிப்புகளால் மக்கள் அவதி

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தெரேசாபுரம் பகுதியில் தத்தனூா்-பேரீஞ்சம்பாக்கம் இணைப்புச் சாலை ஆக்கிரமிப்புகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், வல்லம் ஊராட்சிக்கு உட்பட்ட தெ... மேலும் பார்க்க