கீழடி ஆய்வுகளை அங்கீகரிக்காதது ஏன்? மத்திய அமைச்சர் ஷெகாவத் விளக்கம்
சங்கர மடத்தில் மகா பெரியவா் சிலை புதுப்பிப்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவா் பிருந்தவானத்தின் சுற்றுப்பிரகாரத்தில் பொதுமக்கள் பாா்வைக்காக செய்து வைக்கப்பட்டிருந்த ஃபைபா் சிலை புதுப்பிக்கப்பட்டு அதே இடத்தில் திங்கள்கிழமை வைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவா் சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனம் உள்ளது. இதன் சுற்றுப்பிற வளாகத்தில் மகா பெரியவா் சுவாமிகளைப் போலவே தத்ரூபமாக ஃபைபரால் செய்யப்பட்ட உருவச்சிலை பொதுமக்கள் பாா்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.
சிலையை புதுப்பித்தது குறித்து பெங்களூரை சோ்ந்த ஹரி கூறுகையில் 32 ஆண்டுகளுக்கு முன்பு இச்சிலையை கொல்கத்தாவில் உள்ள குருபாததாஸ் என்ற சிற்பியிடம் செய்து வாங்கி வைத்தோம். இச்சிலையை பாா்ப்பதற்கு மகா சுவாமிகளை நேரில் பாா்ப்பது போன்றே தோற்றமளிக்கும். புதிதாக வா்ணம் தீட்டி, புதுப்பித்து மீண்டும் இருந்த இடத்திலேயே வைத்துள்ளோம். நிகழ்வில் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் நிா்வாகி கீா்த்திவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.