செய்திகள் :

சட்டக் கல்லூரிக்குள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவி - கொல்கத்தாவில் மீண்டும் அதிர்ச்சி

post image

கொல்கத்தாவில் ஏற்கனவே கடந்த ஆண்டு ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் மேற்கு வங்க அரசியல் மட்டுமல்லாது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவர்கள் நீதி வேண்டி பல மாதம் போராட்டம் நடத்தினர். இப்பிரச்னை சுப்ரீம் கோர்ட் வரை சென்றது. தற்போது மேலும் ஓர் அதிர்ச்சியளிக்கும் சம்பவமாக கொல்கத்தா சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தாவின் கஸ்பா பகுதியில் உள்ள தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரியில் இச்சம்பவம் நடந்துள்ளது. அம்மாணவி நேற்று முன் தினம் இரவு கல்லூரி வளாகத்தில் உள்ள ஒரு அறையில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இக்குற்றத்தில் ஈடுபட்டதாக முன்னாள் மாணவர் மனோஜித் மிஸ்ரா(31), ஜைப் அகமத், பிரமித் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பா.ஜ.க வெளியிட்டுள்ள பதிவு

கைது செய்யப்பட்ட நான்கு பேரும் நான்கு நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான செய்தி வெளியானவுடன் பா.ஜ.கவினர் குற்றவாளியை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுடன் சம்பந்தப்படுத்தி சமூக வலைதளத்தில் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மனோஜித்துடன் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் அபிஷேக் பானர்ஜி, மாநில அமைச்சர் சந்திரிமா, மம்தா பானர்ஜியின் மைத்துனியும், கவுன்சிலருமான கஜாரி பானர்ஜி ஆகியோர் இருக்கும் படங்களை பா.ஜ.க தலைவர் பிரதீப் பண்டாரி, ஐ.டி பிரிவு தலைவர் அமித் மால்வியா ஆகியோர் பகிர்ந்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், ''மம்தா பானர்ஜி அரசு குற்றவாளிக்கு துணையாக இருக்கிறது. ஆர்.ஜி கர் மாணவி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோரை அமைதிபடுத்த மம்தா பானர்ஜி முயன்றார். இப்போது நடந்துள்ள குற்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினரே ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் எங்கு இருக்கிறார் என்பதை மறைத்துள்ளனர்" என்று பா.ஜ.க தலைவர் பிரதாப் பண்டாரி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இக்குற்றச்சாட்டுக்கு மம்தா பானர்ஜி அல்லது அவரது கட்சி சார்பாக இது வரை பதிலளிக்கவில்லை. இச்சம்பவத்தால் மேற்கு வங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் மம்தா பானர்ஜிக்கு இது புதிய தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது.

தெலங்கானா: 'ரூ.500 முதல் ரூ.2000 வரை கட்டணம்' - தங்களுடைய ஆபாச வீடியோக்களை இணையத்தில் விற்ற தம்பதி

தெலங்கானாவில் வீட்டிலிருந்தபடி சட்டவிரோதமாக ஆபாசப் படங்களை உருவாக்கி, அதற்காக பணம் பெற்ற தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐதராபாத்தில் உள்ள ஆம்பர்பேட்டையில் வீட்டிலிருந்தே தம்பதிகள் ஆபாசப் படங்களை... மேலும் பார்க்க

சென்னை ஐஐடியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை?; துணிச்சலுடன் போராடியதால் தப்பித்தார் - நடந்தது என்ன?

சென்னை ஐஐடி-யில் 20 வயதான இளம்பெண் ஒருவர் Internship-க்கு வந்திருக்கிறார். இதற்காக அவர் ஐஐடி வளாகத்திலேயே தங்கியிருக்கிறார். கடந்த 25.6.2025-ம் தேதி இரவில் ஐஐடி வளாகத்தில் அவர் தனியாக நடந்துச் சென்றார... மேலும் பார்க்க

3-வது மனைவியைக் கொன்று 23 ஆண்டுகளாக தலைமறைவு வாழ்க்கை.. 75 வயது முதியவர் சிக்கியது எப்படி?

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் தனது மூன்றாவது மனைவியைக் கொன்றுவிட்டு 23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 75 வயது முதியவரை போலீஸார் தற்போது கைது செய்திருக்கின்றனர்.போலீஸாரின் கூற்றின்படி, ஹனுமந்தப்பா எ... மேலும் பார்க்க

திருப்பூர்: 'இன்ஸ்டாகிராம் லின்க்கால் ரூ.22 லட்சம் போச்சு' - பறிகொடுத்த இளைஞர்; எச்சரிக்கும் போலீஸ்

திருப்பூரைச் சேர்ந்தவர் முனிவேலின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பங்குச்சந்தை முதலீடு தொடர்பான விளம்பரம் ஒன்று வந்துள்ளது. அதற்குள் சென்ற முனிவேல், அதில் இணைக்கப்பட்ட வாட்ஸ் ஆஃப் லிங்க் மூலம் குழுவில் இணைந... மேலும் பார்க்க

'கிளர்க் பணிக்கு ரூ.3 லட்சம்' - அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி; கல்லூரி பேராசிரியர் இடை நீக்கம்

திண்டுக்கல் மாவட்டம், பழைய வத்தலகுண்டைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் அரசுப் பேருந்து நடத்துநராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் பழைய வத்தலகுண்டைச் சேர்ந்த தனபால் என்பவரின் மனைவி ராஜேஸ்வரிக்கு திண்டுக்கல்... மேலும் பார்க்க

மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு - சென்னை சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை!

'இரு மதங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவலை பரப்பியதாக' மதுரை ஆதீனம் மீது சென்னை கிழக்கு மண்டல சைஃபர் கிரைம் போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள... மேலும் பார்க்க