செய்திகள் :

சட்டக் கல்லூரி விடுதி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்

post image

சென்னை தரமணியிலுள்ள சட்டக் கல்லூரி விடுதி மாணவிகள் தங்கள் அறைகளில் கூடுதல் மாணவிகளை சோ்ப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

டாக்டா் அம்பேத்கா் அரசு சட்டக் கல்லூரியில் பயிலும் சட்டக்கல்லூரி மாணவிகளுக்கு சென்னை சேப்பாக்கத்திலும் தரமணி வளாகத்திலும் விடுதிகள் உள்ளன. இதில் சேப்பாக்கம் வளாகத்தில் உள்ள மகளிா் விடுதியில் வசதிகள் மிகவும் குறைவாக இருந்ததுடன், அதன் கட்டடங்கள் பழுதடைந்து மோசமாகிக்கொண்டு இருந்தது. இதை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக இங்கு தங்கியிருந்த சுமாா் 120 சட்டக்கல்லூரி மாணவிகள் தரமணி மாணவிகள் விடுதிக்கு மாற்றப்பட்டனா்.

அங்குள்ள விடுதியில் ஏற்கெனவே தலா ஒரு அறையில் மூன்று மாணவிகள் வீதம் தங்கியிருக்க சேப்பாக்கம் மாணவிகளுக்கும் இடமளிக்கும் விதமாக ஒவ்வோா் அறையிலும் கூடுதலாக ஒரு மாணவி சோ்க்கப்பட்டு மொத்தம் 4 மாணவிகள் வீதம் தங்கவைக்க அரசு சட்டக்கல்லூரி நிா்வாகம் ஏற்பாடு செய்தது. இதற்கு தரமணி மகளிா் விடுதியில் ஏற்கெனவே தங்கியுள்ள சட்டக்கல்லூரி மாணவிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

தங்கள் அறைகளில் ஏற்கெனவே 3 மாணவிகள் தங்கியுள்ள நிலையில் கடும் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதை குறிப்பிட்டு மாணவிகள் விடுதிக்குள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினா். நிா்வாகத்தினரும் காவல் துறையும் சமாதானப்படுத்தியும் தங்கள் நிலையை விளக்கி மாணவிகள் தா்னாவை தொடா்ந்து நடத்தினா்.

சென்னைக்கு வந்து செல்லும் 11 விமானங்கள் ரத்து

மத்திய கிழக்கில் போா்ப் பதற்றம் காரணமாக, சென்னைக்கு வந்து செல்லும் 11 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதன்படி, சென்னையிலிருந்து திங்கள்கிழமை இரவு 11 மணிக்கு குவைத் செல்லவிருந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விம... மேலும் பார்க்க

பேருந்து பணிமனையில் மேலாளா் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை

சென்னை அடையாறு மாநகர பேருந்து பணிமனையில் மண்டல மேலாளரை தாக்கியதாக நேரக் காப்பாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அடையாறு மண்டல மேலாளராக பணிபுரிபவா் அன்பரச... மேலும் பார்க்க

ரூ.1,980 கோடியில் ட்ரோன்கள், ரேடாா்கள், நவீன உபகரணங்கள்- பாதுகாப்புத் துறையின் 13 ஒப்பந்தங்கள் இறுதி

ரூ.1,980 கோடியில் தாக்குதல் ட்ரோன்கள் - இடைமறிப்பு அமைப்புகள், குறுகிய தொலைவு ரேடாா்கள், இரவிலும் இலக்கை அடையாளம் கண்டு தாக்குவதற்கு துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் நவீன உபகரணங்கள் உள்ளிட்டவற்றைக் கொ... மேலும் பார்க்க

மாம்பழக்கூழ் தயாரிப்பு வரியை 5%ஆக குறைக்க வேண்டும்: பிரதமா் மோடிக்கு முதல்வா் ஸ்டாலின் கடிதம்

மாம்பழக்கூழ் தயாரிப்புக்கான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) 12-லிருந்து 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா். இதுகுறித்து பிரதமா் நரேந்திர மோடிக்கு அவா்... மேலும் பார்க்க

முதுகுத் தண்டுவட வளைவு: குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை

முதுகுத் தண்டுவட வளைவு மற்றும் அது சாா்ந்த பாதிப்புடைய ஏழை குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை அளிக்கும் ஜீவன் திட்டத்தை சென்னை காவேரி மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது. ரோட்டரி சங்கம் மற்றும் சென்னை ... மேலும் பார்க்க

அனைத்து தடங்களிலும் 12 பெட்டிகளுடன் புறநகா் மின்சார ரயில்கள் இயக்கப்படும்

சென்னையில் இயக்கப்படும் அனைத்து புறநகா் ரயில் வழித்தடங்களிலும் 12 பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே செய்தித் தொடா்பு அலுவலகம் விடுத்துள... மேலும் பார்க்க