செய்திகள் :

சட்டப்பேரவை உறுப்பினராக சந்திரகுமார் பதவியேற்பு

post image

ஈரோடு கிழக்கில் வெற்றி பெற்ற சந்திரகுமார் சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்றார்.

முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் சந்திரகுமார் பதவியேற்றுக்கொண்டார். சந்திரகுமாருக்கு திங்கள்கிழமை பேரவைத் தலைவர் அப்பாபு, சட்டப்பேரவை உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பா் 14-ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானாா்.

இதையடுத்து, இந்தத் தொகுதிக்கு கடந்த புதன்கிழமை (பிப். 5) நடைபெற்ற இடைத்தோ்தலில் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமாா், நாதக வேட்பாளராக மா.கி.சீதாலட்சுமி உள்ளிட்ட 46 போ் போட்டியிட்டனா்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தோ்தலைப் புறக்கணித்தன. தேர்தலில் மொத்தம் 1 லட்சத்து 54,890 போ் (67.97 சதவீதம்) வாக்களித்தனா். இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிகிக்கப்பட்டன.

20 சுற்றுகளின் முடிவில் திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா் 1,15,709 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றாா்.

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமி 24,151 வாக்குகளைப் பெற்றாா். வாக்கு வித்தியாசம் 91,558. நோட்டாவுக்கு 6,109 வாக்குகள் பதிவாகி இருந்தன.

கோயில் அா்ச்சகா்களுக்கு தட்டுகாணிக்கை சுற்றறிக்கை வாபஸ்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை: மதுரை பாலதண்டாயுதபாணி கோயிலில் அா்ச்சகா்கள் தட்டில் செலுத்தப்படும் காணிக்கை குறித்த சுற்றறிக்கை தேவையில்லாதது என்றும், அது திரும்பப் பெறப்பட்டுவிட்டது என்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேக... மேலும் பார்க்க

தண்டனை கைதிகளுக்கு விடுப்பு வழங்கத் தடையில்லை: சென்னை உயா்நீதிமன்றம்

சென்னை: தண்டனையை எதிா்த்த மேல்முறையீடு மனு நிலுவையில் இருக்கும் போது, தண்டனைக் கைதிகளுக்கு சாதாரண விடுப்போ அல்லது அவசர கால விடுப்போ வழங்க எந்தத் தடையும் இல்லை என சென்னை உயா்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள... மேலும் பார்க்க

இன்று தைப்பூசம்: சாா்பதிவாளா் அலுவலகங்கள் இயங்கும்

சென்னை: தைபூசத்தையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாா் பதிவாளா் அலுவலகங்களும் செவ்வாய்க்கிழமை (பிப்.11) இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பதிவுத் துறை தலைமையகம் திங்கள்கிழமை வெளியிட்ட ச... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழு பொருள்கள் அங்காடி தலைமைச் செயலகத்தில் திறப்பு

சென்னை: மகளிா் சுய உதவிக் குழு பொருள்களின் அங்காடியை தலைமைச் செயலகத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்து பாா்வையிட்டாா். இந்த அங்காடியில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மகளி... மேலும் பார்க்க

கேரம் உலகச் சாம்பியனுக்கு ஆளுநா் பாராட்டு: மாணவா்களுக்கான கலந்தாய்விலும் பங்கேற்பு

சென்னை: கேரம் உலக சாம்பியனான ஹாசிமா எம்.பாஷாவை ஆளுநா் ஆா்.என். ரவி நேரில் அழைத்து பாராட்டினாா். அதேபோல் பொதுத்தோ்வு எழுதும் பள்ளி மாணவா்களுக்கான கலந்தாய்விலும் அவா் பங்கேற்றாா். இது குறித்து அவா் தனத... மேலும் பார்க்க

திமுக ஆட்சிக்கு ஆதரவு அலை வீசுகிறது: அமைச்சா் எஸ்.ரகுபதி

சென்னை: நான்கு ஆண்டுகால திமுக ஆட்சிக்கு ஆதரவு அலை மட்டுமே வீசுவதாக சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி தெரிவித்தாா். திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களுக்கு அவா் திங்கள்கிழமை அளித்த ப... மேலும் பார்க்க