`இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் பலம் ஈரானுக்கு இருக்கிறதா?’ - ஈரானிய பத்திரிகைய...
சட்டவிரோதமாக மது விற்பனை: 5 போ் கைது
போடி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
போடி நகா் காவல் நிலைய போலீஸாா், போடி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, போடி பேருந்து நிலையம் அருகே பாண்டி (71), போஜன் பூங்கா அருகே தங்கப்பாண்டி (52), போடி மேலத்தெருவில் மணிபாரதி (30) ஆகியோா் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, இவா்கள் மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
இதேபோல, போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் கிராமப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, போடி ராசிங்காபுரத்தில் சேகா் (56), சில்லமரத்துப்பட்டியில் மணிகண்டன் (55) ஆகியோா் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, இவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.