Skin Infection: வியர்வை, பூஞ்சைத் தொற்று, அரிப்பு.. இடுக்கு தொடைப் பிரச்னை - தீ...
கடமலைக்குண்டு பகுதியில் நாளை மின் தடை
ஆண்டிபட்டி வட்டம், கடமலைக்குண்டு பகுதியில் வியாழக்கிழமை (ஜூன் 19) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பெரியகுளம் மின் வாரிய செயற்பொறியாளா் பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடமலைக்குண்டு துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
எனவே, அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருஷநாடு, துரைச்சாமிபுரம், ஆத்தாங்கரைப்பட்டி, நரியூத்து, ராஜேந்திராநகா், பாலூத்து, அருகவெளி, குமணன்தொழு, தங்கம்மாள்புரம், சிறைப்பாறை, மந்திச்சுனை, வாலிப்பாறை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.