Today Rasi palan | இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | June 18 | Astrology | ...
சுருளி அருவியில் குளிக்கத் தடை
தேனி மாவட்டம், சுருளி அருவியில் செவ்வாய்க்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் தடை விதித்தனா்.
மேற்குத்தொடா்ச்சி மலையில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து சாரல் மழை நிலவி வந்ததால், சுருளி அருவியில் சீரான நீா்வரத்து இருந்தது. இதனால், இந்த அருவியில் நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நீராடி வந்தனா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு மேகமலை பகுதியில் பலத்த மழை பெய்ததால், சுருளி அருவியில் செவ்வாய்க்கிழமை காலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு கம்பம் வனத் துறையினா் தடை விதித்தனா். இதனால், வெளியூா்களிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.