செய்திகள் :

சட்டவிரோத குடியேற்றம்: புணேவில் 4 பேர் கைது!

post image

மகாராஷ்டிரத்தின் புணேவில் வங்கதேசத்தைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தெற்கு ராணுவ புலனாய்வு பிரிவு மற்றும் கோந்த்வா காவல் நிலையம் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில்

புணேவின் நாட்டிங் ஹில் சொசைட்டியின் புண்யாதம் ஆசிரம சாலைக்கு அருகிலுள்ள தொழிலாளர் முகாமில் வசிக்கும் வங்கதேசத்தைச் சேர்ந்த நான்கு பேரைக் கைது செய்தனர்.

கோந்த்வா பகுதியில் உள்ள தொழிலாளர்கள் முகாமில் ஆவணமற்ற வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் இருப்பது குறித்து ராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலைத் தொடர்ந்து ஜூன் 13ல் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது நான்கு பேர் தப்பிஓட முயன்றபோது கூட்டுக் குழுவால் அவர்கள் பிடிக்கப்பட்டனர். அவர்களுடன் விசாரணை மற்றும் ஆவணச் சரிபார்ப்பில், இந்தியாவில் சட்டவிரோதமாக வசிக்கும் வங்கதேச நாட்டவர்கள் என்று தெரியவந்தது.

கைது செய்யப்பட்டவர்களில் ஸ்வபன் மண்டல் (39), மிதுன் குமார் சந்தால் (35), ரனோதிர் மண்டல் (29), மற்றும் திலீப் மண்டல் (38) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நான்கு பேரும் வங்கதேசத்தின் சத்கிரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், இது இந்தியாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

இஸ்ரேல் நீண்ட காலமாக ரௌடி நாடாக அறியப்படுகிறது: பினராயி விஜயன்

இஸ்ரேல் நீண்ட காலமாக ரௌடி நாடாக அறியப்படுகிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் பினராயி விஜயன், ஈரான் மீதான இஸ்ரே... மேலும் பார்க்க

அமைதியாக இருப்பதே புத்திசாலித்தனம்! பாஜகவினருக்கு மத்திய அமைச்சர்கள் அறிவுரை!

சில சமயங்களில் அமைதியாக இருக்க வேண்டும் என்று பாஜகவினருக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவுரை வழங்கினார்.விஜய் ஷாவின் பேச்சு சர்ச்சையான நிலையில், கட்சியினர் பேசும்போது கவனமுடன் பேச வேண்டும் என்று மத்தி... மேலும் பார்க்க

உ.பி.: மின்னல் பாய்ந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தில் மின்னல் பாய்ந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், சன்வர்ஷா ஹல்லபோர் கிராமத்தில் மின்னல் பாய்ந்து ஒரே குடும்பத்தைச... மேலும் பார்க்க

திருவனந்தபுரத்தில் பிரிட்டிஷ் போர் விமானம் அவசர தரையிறக்கம்

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பிரிட்டிஷ் போர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. எரிபொருள் குறைவாக இருந்ததால் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பிரிட்டிஷ் எப்-35 போர் விமானம் சனிக்கி... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து! 12 பேரின் உடல்கள் ஒப்படைப்பு! மருத்துவப் பணியில் 600 பேர்!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களின் உடல்களை ஒப்படைக்கும் பணி இன்றுமுதல் தொடங்கப்படுகிறது.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் 270-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். விமானம் தீப்பற்றி எரி... மேலும் பார்க்க

தில்லியில் 100 அடி உயர மொபைல் கோபுரம் இடிந்து விழுந்தது: யாருக்கும் காயம் இல்லை

தில்லியில் 100 அடி உயர மொபைல் கோபுரம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தெற்கு தில்லியின் சஃப்தர்ஜங் என்க்ளேவில் 100 அடி உயர மொபைல் கோபுரம் பலத்த காற்று மற்றும் மழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை அதிகா... மேலும் பார்க்க