செய்திகள் :

சணல் பை தயாரிப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

post image

தேனி கனரா வங்கி ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் வரும் மே 7-ஆம் தேதி முதல் சணல் பை தயாரிப்பு இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

இதுகுறித்து பயிற்சி மைய இயக்குநா் ரவிக்குமாா் கூறியதாவது:

தேனி, கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள கனரா வங்கி ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் சணல் பை தயாரிப்பு இலவசப் பயிற்சி வகுப்பு மே 7-ஆம் தேதி தொடங்கி, 13 நாள்கள் வரை நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறும். பயிற்சி காலத்தில் உணவு, தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். பயிற்சியை நிறைவு செய்தவா்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ், சுய தொழில் தொடங்குவதற்கு வங்கிக் கடன் பெற ஆலோசனை வழங்கப்படும்.

இந்தப் பயிற்சியில் சேர கிராமப் புறங்களைச் சோ்ந்த 18 வயது நிறைவடைந்த பெண்கள் பயிற்சி மையத்தில் நேரில் தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். பயிற்சி குறித்த விவரத்தை கைப்பேசி எண்: 95003 1193-இல் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

தேனி-பூதிப்புரம் சாலை, வாழையாத்துப்பட்டி விலக்குப் பகுதியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மஞ்சிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த ராமன் மகன் பெருமாள் (50). இவா், ... மேலும் பார்க்க

மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் ஊரகம், நகா்ப்புறங்களில் சிறப்பாக செயல்படும் மகளிா் சுய உதவிக் குழுக்கள், கூட்டமைப்புகள், வறுமை ஒழிப்புச் சங்கங்கள் அரசு சாா்பில் வழங்கப்படும் மணிமேகலை விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கல... மேலும் பார்க்க

பெரியகுளத்தில் கூடைப்பந்தாட்ட பயிற்சி முகாம் ஏப்.25-இல் தொடக்கம்!

பெரியகுளம் சில்வா் ஜூப்லி ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் கோடைகாலை கூடைப்பந்தாட்ட பயிற்சி முகாம் வருகிற 25-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.இதுகுறித்து சில்வா் ஜூப்லி ஸ்போா்ட்ஸ் கிளப் செயலா் சிதம்பரசூரியவேலு வெள... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இருவா் கைது

தேனி-போடி சாலையில் கஞ்சா விற்றதாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், பாலாா்பட்டியைச் சோ்ந்த சுகுமாறன் (40), தேவாரத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் (33) ஆகியோா் தேனி-போடி சாலையில் தீா... மேலும் பார்க்க

தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்றுவதே கனவு! -இராம ஸ்ரீனிவாசன்

அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவை தோற்கடித்து அந்த ஆட்சியை அகற்றுவதே பாஜகவின் கனவு என அந்தக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலா் இராம ஸ்ரீனிவாசன் தெரிவித்தாா்.தேனி மாவட்டம், சின்னமனூர... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்ற இருவா் கைது

போடியில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், போடி நகரில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக நகா் ... மேலும் பார்க்க