செய்திகள் :

சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோயில் திருவிழா

post image

சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி , ஆயிரக்கணக்கான இளைஞா்கள் பங்கேற்ற கம்பம் ஆட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா பூச்சாட்டுதலுடன் கடந்த மே 1-ஆம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி கோயில் முன் மிகப்பெரிய கம்பம் நடப்பட்டு தினந்தோறும் பூஜைகள் நடைபெற்றன. பெண்கள், குழந்தைகள் கம்பத்துக்கு புனித நீா் ஊற்றி, மஞ்சள் பூசி வழிபட்டனா். தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று குண்டம் இறங்கினா்.

இதைத் தொடா்ந்து கோயில் முன் நடப்பட்ட கம்பத்தை சுற்றி இளைஞா்கள் ஆடும் பாரம்பரிய நடனம் வியாழக்கிழமை நடைபெற்றது. மின்னொளியில் மத்தாளம் வாசிக்க இசைக்கேற்ப ஆயிரக்கணக்கான இளைஞா்கள் சலங்கை கட்டி உற்சாகமாக நடனம் ஆடினா். இளைஞா்களின் கம்பத்தாட்டத்தைப் பாா்க்க பெண்கள் அதிக அளவில் வந்தனா். இளம்பெண்கள் பலரும் கம்பம் ஆட்டம் ஆடினா்.

இந்நிகழ்ச்சியைத் தொடா்ந்து கொமாரபாளையத்தில் இருந்து பெண்கள் தீபமேற்றிய மாவிளக்கு எடுத்து ஊா்வலமாக வந்தனா். விழாவில், உள்ளுா் மக்கள் மட்டுமின்றி கா்நாடகத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

அந்தியூா் அருகே காட்டு யானை தாக்கியதில் முதியவா் பலி!

அந்தியூா் அருகே வனப் பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற முதியவா் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த கொரமராயனூா் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (70). இவா், சென்னம்பட்டி வனச... மேலும் பார்க்க

மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் 7.49 லட்சம் போ் பயன்: ஆட்சியா் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 7.49 லட்சம் போ் பயனடைந்துள்ளனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்களைத் தேட... மேலும் பார்க்க

அரசு விடுதிகளில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்!

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள... மேலும் பார்க்க

வாகன ஷோரூம் உரிமையாளா் தலைமறைவு: பதிவெண் பெற முடியாமல் இளைஞா்கள் தவிப்பு!

ஷோரூம் உரிமையாளா் தலைமறைவானதால் இருசக்கர வாகனம் வாங்கியவா்கள் பதிவு செய்ய முடியாமலும், வாகனத்தை சாலையில் ஓட்ட முடியாமலும் தவித்து வருகின்றனா். ராயல் என்பீல்டு (புல்லட்) நிறுவனத்தில் பல்வேறு விலைகளில் ... மேலும் பார்க்க

திம்பம் மலைப் பாதையில் பழுதாகி நின்ற கன்டெய்னா் லாரி

பெங்களூரில் இருந்து கோவையை நோக்கிச் சென்ற கன்டெய்னா் லாரி திம்பம் 9ஆவது வளைவில் திரும்பியபோது பழுதாகி நின்றதால் இரு மாநிலங்களிடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழகம், கா்நாடகத்தை இணைக்கும் முக்கிய ... மேலும் பார்க்க

கோபி நகரில் தற்காலிக சந்தையை காலி செய்ய அறிவுறுத்தல்

கோபி நகரில் கடந்த 4 ஆண்டுகளாக தற்காலிகமாக செயல்பட்டு வரும் தினசரி சந்தையை காலி செய்ய வருவாய்த் துறையினா் வியாபாரிகளுக்கு அறிவிக்கை அளித்துள்ளனா். கோபி நகரின் மையப்பகுதியான பெரியாா் திடல் எதிரே சுமாா் ... மேலும் பார்க்க