செய்திகள் :

சத்தீஸ்கரில் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 13 நக்சல்கள் சரண்!

post image

சத்தீஸ்கர் மாநிலத்தில் கூட்டாக ரூ.22 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்டு வந்த 13 நக்சல்கள், காவல் துறையினரிடம் இன்று சரண்டைந்துள்ளனர்.

பிஜப்பூர் மாவட்ட காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில், அம்மாநிலத்தில் நக்சல்களாக செயல்பட்டு வந்த 8 பெண்கள் உள்ளிட்ட 13 பேர் இன்று (ஜூன் 27) சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சரணடைந்த 13 பேரையும் காவல் துறையினர் தேடிவந்த நிலையில், அவர்களை பிடிக்க கூட்டாக ரூ.22 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, தேவி முச்சாகி (எ) பிரமிளா (வயது 21) என்ற பெண்ணை பிடிக்க ரூ.8 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் தற்போது சரணடைந்துள்ளார்.

இத்துடன், சரணடைந்தவர்களில், கோசா ஒயாம் (எ) ரமேஷ் (29) என்பவரின் மீது ரூ.5 லட்சமும், கோசி பொடியம் (27) எனும் பெண்ணை பிடிக்க ரூ.2 லட்சமும் வெகுமதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இவர்களுடன், சரணடைந்த சம்மி செம்லா (23), சோட்டு பார்சிக் (25), மோட்டி தட்டி (24), சுனிதா ஹெம்லா (24), மஞ்சுளா குஞ்சம் (27), சயிபோ பொடியம் (18) மற்றும் ஹுங்கி உண்டம் (21) ஆகியோரின் மீது தலா ரூ.1 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு அவர்களை பிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

தற்போது சரணடைந்துள்ள நக்சல்கள் அனவருக்கும் அரசுத் திட்டத்தின் அடிப்படையில், ரூ.50,000 வழங்கப்பட்டு அவர்களது மறுவாழ்வுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 241 நக்சல்கள், பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SUMMARY

13 Naxals wanted with a reward of Rs. 22 lakhs surrendered!

இதையும் படிக்க: இந்தியா - ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் உரையாடல்!

முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களையும் விட்டுவைக்காத எரிபொருள் கலப்படம்: நடு வழியில் நின்ற அவலம்!

மத்திய பிரதேசத்தில் முதல்வா் மோகன் யாதவின் பாதுகாப்புக்குச் சென்ற 19 வாகனங்கள் திடீரென பழுதாகி நடு வழியில் நின்றன. விசாரணையில் அந்த வாகனங்கள் கலப்பட பெட்ரோல், டீசல் நிரப்பப்பட்டதுதான் காரணம் என்பது தெ... மேலும் பார்க்க

பொதுத் துறை வங்கிகள் தாராளமாக கடன் வழங்க வேண்டும்: நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

நாட்டின் பொருளாதாரத்துக்கு ஊக்கமளிக்கும் துறைகளுக்கு கடன் வழங்குவதை அதிகரிக்க வேண்டும் என்று பொதுத் துறை வங்கிகளை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டுள்ளாா். பொதுத் துறை வங்கிகளின் செ... மேலும் பார்க்க

கொல்கத்தா அரசு கல்லூரிக்குள் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: திரிணமூல் முன்னாள் நிர்வாகி, 2 மாணவா்கள் கைது!

மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் அரசு சட்டக் கல்லூரிக்குள் முதலாம் ஆண்டு மாணவி ஒருவா் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது தொடா்பாக, கல்லூரியின் முன... மேலும் பார்க்க

ரஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி: 2 ஆண்டுகள் இல்லாத அளவில் மே மாதத்தில் அதிகரிப்பு

ரஷியாவிலிருந்து இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவில் கடந்த மே மாதம் அதிக அளவில் நிலக்கரியை இந்தியா இறக்குமதி செய்திருப்பது தெரியவந்துள்ளது. முந்தைய மாதத்தைவிட 52% கூடுதல் நிலக்கரியை மே மாதத்தில் இந்தியா இற... மேலும் பார்க்க

இந்தியா - சீனா எல்லையில் நில கையகப்படுத்த கூடுதல் இழப்பீடு: உச்சநீதிமன்றம் தடை

இந்திய - சீனா எல்லையில் 537 ஏக்கா் நிலம் கையகப்படுத்தியதற்கு கூடுதல் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அருணாசலப் பிரதேச எல்லையில் ராணுவம் தொடா்பான திட... மேலும் பார்க்க

உரிமைகள் விட்டுக் கொடுக்கப்பட்டதே தமிழக மீனவா்கள் கைதுக்கு காரணம்: அமைச்சா் ஜெய்சங்கா்

‘நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டபோது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் குறிப்பிட்ட பகுதிகளில் மீன்பிடி உரிமை விட்டுக் கொடுக்கப்பட்டதே தமிழக மீனவா்களை இலங்கைக் கடற்படை தொடா்ச்சியாக கைது செய்வதற்கு ... மேலும் பார்க்க