செய்திகள் :

சத்தீஸ்கர் கனமழை: வெள்ளத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்

post image

திருப்பத்தூரைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார் (43). இவருக்குத் திருமணம் முடிந்து பவித்ரா (40) என்ற மனைவியும், சௌஜைன்யா (7) மற்றும் சௌமையா (4) என இரு மகள்கள் இருக்கின்றனர்.

ராஜேஷ் குமார் சத்தீஸ்கர் மாநிலத்தின் ரயிபூரில் ஒப்பந்தக்காரராகப் பணிபுரிந்து வந்தவர், குடும்பத்துடன் சத்தீஸ்கரிலேயே வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று விடுமுறை என்பதால் குடும்பத்துடன் சுற்றுலாவுக்குப் புறப்பட்டிருக்கிறார். சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் மாவட்டத்தில் கடும் மழை பெய்து வருகிறது.

சத்தீஸ்கர் வெள்ளம்
சத்தீஸ்கர் வெள்ளம்

சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வெள்ளத்தில் ராஜேஷ் குமார் குடும்பத்துடன் சென்ற கார் அடித்துச் செல்லப்பட்டது.

காரில் சிக்கியிருந்த நான்கு பேரும் உயிரிழந்தனர். காரில் இருந்த ஓட்டுநர் லாலா யாதுவால் மரக்கிளையைப் பிடித்துக்கொண்டு உயிர் தப்பினார்.

அதைத் தொடர்ந்து சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணுதேவ் சாய் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.

மீட்புக்குழுவினர் 18 மணி நேரம் தொடர்ச்சியாக முயற்சி செய்து காரையும் நான்கு உடல்களையும் மீட்டனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

TN Rains: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? - வானிலை மையம் அறிக்கை

நேற்று இரவில் இருந்து சென்னையில் மழை பெய்து வருகிறது. நேற்று காலையும் மழை பெய்தது. ஆனால், காலை 10 மணிக்கு முன்பே, வெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது. இந்த நிலையில், நேற்று இரவு முதல் சென்னையில் மழை பெய்த... மேலும் பார்க்க

சென்னை: ``50 நிமிடத்தில் 5 செ.மீ. மழை பதிவு" - வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்று அதிகாலையில் சென்னையின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்திருக்கிறது. கிண்டி, அண்ணா நகர், மந்தைவெளி, ஆதம்பாக்கம், நுங்கம்பாக்கம், அடையார், வடபழனி, ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய இடங்களில் இடிய... மேலும் பார்க்க

மும்பை கனமழை: முடங்கிய புறநகர் ரயில் சேவை; அமிதாப்பச்சன் பங்களாவில் புகுந்த மழை வெள்ளம்

மும்பையில் கடந்த 4 நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக நகரின் மையப் பகுதியில் ஓடும் மித்தி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றங்கரையோரம் ஏராளமான குடிசைகள் இருக்கின்றன. மித்தி ஆற்றில் ஏற்கனவே த... மேலும் பார்க்க

மும்பையை புரட்டிப் போட்ட கனமழை; சாலைகளைச் சூழ்ந்த வெள்ளம்... இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நேற்றுமுன் தினத்தில் இருந்து தொடர்ந்து விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இக்கனமழை இன்று காலையில் மேலும் தீவிரம் அடைந்தது. இதனால் நகரில் பல சாலைகள் வெள்ளத்தி... மேலும் பார்க்க

Rain Alert: ``சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை" - அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!

வருகிற 18-ம் தேதி (நாளை) வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, கடந்த சில நாட்களாகவே சென்னை... மேலும் பார்க்க

Mumbai Rain: விமானம், வாகன போக்குவரத்து பாதிப்பு; நிலச்சரிவால் இருவர் பலி; கனமழையிலும் நடந்த உறியடி

மும்பையில் நேற்று தொடங்கிக் கன மழை பெய்து வருகிறது. இம்மழையால் மும்பையின் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி போக்குவரத்து முடங்கி இருக்கிறது. காந்தி நகர், கிங்சர்க்கிள், சயான், குர்லா, செம்பூர், அந்தேர... மேலும் பார்க்க