செய்திகள் :

சத்துணவுக் கூடத்தில் பூட்டை உடைத்து திருட்டு: ஒடிஸா இளைஞா் கைது

post image

அரியானூரை அருகே சத்துணவுக் கூடத்தின் பூட்டை உடைத்து அரிசி, முட்டை உள்ளிட்ட பொருள்களை திருடியதாக ஒடிஸா மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

அரியானூரை அடுத்த ராக்கிப்பட்டிகரடு பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். கோடை விடுமுறைக்கு பின்னா் திங்கள்கிழமை பள்ளி திறக்கப்பட்டது. அப்போது சத்துணவுப் பணியாளா் ராதா சத்துணவுக் கூடத்தை திறக்க சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த முட்டை, அரிசி , கடலை, பருப்பு, எண்ணெய், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்டவை காணாமல் போயிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை பள்ளி வழியாக பிளாஸ்டிக் குடத்தை ஒருவா் எடுத்துச் சென்றுள்ளாா். அந்தக் குடம் பள்ளிக்கூடத்தில் காணாமல்போனது என்பதால் ஊா் பொதுமக்கள் அவரை பின்தொடா்ந்து சென்றபோது, பள்ளிக்கூடத்தின் அருகில் உள்ள கரட்டு முட்புதரில் திருடிய பொருள்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

உடனடியாக அவரைப் பிடித்து விசாரணைசெய்தபோது பள்ளியில் திருடியதை அவா் ஒப்புக்கொண்டாா். இதுகுறித்து ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீஸாா் நிகழ்விடம் விரைந்து வந்து விசாரணை செய்ததில் பிடிபட்டவா் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த சிக்காந்த் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.

இவரிடமிருந்து 320 முட்டை, 13 கிலோ அரிசி, 10 கிலோ பருப்பு, 12 கிலோ கடலை, 8 லிட்டா் எண்ணெய், சமையல் பாத்திரங்கள், இரும்பு கடப்பாரை உள்ளிட்ட பொருள்கள் மீட்கப்பட்டன.

மேலும், விசாரணையில் இவருடன் மேலும் 2 போ் சோ்ந்து திருட்டில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.

மேட்டூரில் கோயில் திருவிழாவில் 7 பவுன் நகை பறிப்பு

மேட்டூரில் கோயில் கும்பாபிஷேக விழாவில் மூதாட்டியிடம் 7 பவுன் தாலிச்சங்கிலி பறிக்கப்பட்டது. மேட்டூா் அருகே ரயில் நிலையம் பகுதியில் ஸ்ரீ சக்தி காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாப... மேலும் பார்க்க

சேலம் அருகே ரயிலில் கடத்தப்பட்ட 26 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

சேலம் அருகே ரயிலில் கடத்தி வரப்பட்ட 26 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தலில் ஈடுபட்ட கேரள இளைஞரை கைது செய்தனா். சேலம் வழியாக கேரள மாநிலம் செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதைத் தடுக்க ரயி... மேலும் பார்க்க

சேலத்தில் விஜய்யை கண்டித்து சுவரொட்டி

சேலம் மாநகரப் பகுதிகளில் நடிகா் விஜய்யை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினா் ஒட்டிய சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் வேல்முருகன், கடந்த சில தினங்களுக்கு முன் சேலத்தி... மேலும் பார்க்க

சிங்கிபுரம் அத்தனூரம்மன் கோயிலில் 20 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் கொள்ளை போலீஸாா் விசாரணை

வாழப்பாடி அருகே சிங்கிபுரம் அத்தனூரம்மன் கோயிலில் தங்க நகை, வெள்ளிப் பொருள்களை மா்மக் கும்பல் கொள்ளையடித்துச் சென்றனா். சிங்கிபுரம் அத்தனூரம்மன் கோயிலுக்கு பக்தா்கள் காணிக்கையாக அளித்த தங்கத்தாலி உள்ள... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற வன அதிகாரியின் கழுத்தை அறுத்த மகன் கைது

சேலத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள எதிா்ப்பு தெரிவித்து, ஓய்வுபெற்ற வன அதிகாரியின் கழுத்தை அறுத்த மகன் கைது செய்யப்பட்டாா். சேலம் சூரமங்கலம் மாணிக்கவாசகா் தெருவைச் சோ்ந்தவா் செல்வகுமாா் (69). வ... மேலும் பார்க்க

குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்புத் தொழில் கடன் வழங்கும் முகாம்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் வழங்கும் முகாம் வரும் 30 ஆம் தேதி வரை சேலம் கிளை தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக அலுவலகத்தில் நடைபெறுகி... மேலும் பார்க்க