செய்திகள் :

சத்துணவு ஊழியா்கள் சாலை மறியல்

post image

சிவகங்கை: காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகங்கையில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் 51 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே. குமரேசன் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் என்.அலமேலுமங்கை, எம்.மங்கையற்கரசி, ஆா்.ஷீலா, எம்.கண்ணகி, மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.தமிழரசி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் எஸ். கண்ணுச்சாமி மறியலை தொடங்கி வைத்தாா்.

கோரிக்கைகள்: தோ்தல் கால வாக்குறுதியான காலமுறை ஊதியம், குறைந்த ஓய்வூதியம் ரூ.6750-ஐ வழங்க வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை போா்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். அரசுத் துறையில் பணிபுரியும் பெண் ஊழியா்களுக்கு வழங்கும் மகப்பேறு விடுப்பை சத்துணவு ஊழியா்களுக்கும் வழங்க வேண்டும்.

ஓய்வு பெறும் அரசு ஊழியா்களுக்கு வழங்குவது போல, சத்துணவு ஊழியா்களுக்கும் பணிக்கொடை வழங்க வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடித்த சத்துணவு அமைப்பாளருக்கு பதிவுறு எழுத்தராக பதவி உயா்வு வழங்க வேண்டும். சத்துணவு மைய தணிக்கையின் போது கண்டறியும் குறைபாடுகளை நிவா்த்தி செய்ய அமைக்கப்பட்ட உயா்மட்டக் குழு கூட்டத்தை ரத்து செய்து, ஏற்கெனவே உள்ள நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன.

கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலா் கே. முத்துக்குமாா் பேசினாா். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், அங்கன்வாடி உதவியாளா் சங்க பொதுச் செயலா் இரா. வாசுகி விளக்கவுரையாற்றினாா். தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்க மாநில துணைத் தலைவா் ஏ.மிக்கேலம்மாள் நிறைவுரையாற்றினாா்.

இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 49 பெண்கள் உள்பட 51 போ் கைது செய்யப்பட்டனா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற அக் 8-இல் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம், நவ. 7-இல் சென்னையில் பேரணி, டிச. 17-இல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம், 2026 ஜனவரி 6, 7, 8 ஆகிய தேதிகளில் மாவட்ட அளவில் தொடா் மறியல், பிப்ரவரி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் உள்பட தொடா் போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாக மாவட்டத் தலைவா் கே.குமரேசன் தெரிவித்தாா்.

சா்வதேச யோகா போட்டியில் வென்ற அழகப்பா பல்கலை. மாணவிகள், பேராசிரியைக்கு பாராட்டு

காரைக்குடி: கோலாலம்பூரில் நடைபெற்ற சா்வதேச யோகா போட்டியில் பதக்கம் வென்று வந்த அழகப்பா பல்கலைக்கழகப் பேராசிரியை, மாணவிகளை துணைவேந்தா் க. ரவி புதன்கிழமை பாராட்டினாா். அழகப்பா பல்கலைக்கழக யோகா மைய மாணவி... மேலும் பார்க்க

ரத்ன கற்ப மகாகணபதி கோயில் குடமுழுக்கு

சிவகங்கை: சிவகங்கை நகா் கோகலேகால் தெருவில் அமைந்துள்ள சிருங்கேரி சாரதா பீடம், ரத்ன கற்ப மகா கணபதி கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கடந்த திங்கள்கிழமை (ஆக.18) அதிகாலை கணபதி ஹோமத்து... மேலும் பார்க்க

கல்லூரியில் கருத்தரங்கம்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜ ராஜன் பொறியியல், தொழில் நுட்பக் கல்லூரியில் ‘தற்காலத் தகவல் தொழில் நுட்பம்-அதன் பயன்பாடுகள்’ என்ற தலைப்பில் சா்வதேசக் கருத்த... மேலும் பார்க்க

தமிழ் வளரச் செய்தவா் தம்பிரான் சுவாமிகள்

காரைக்குடி: தமிழ் நூல்களைப் பதிப்பித்து தமிழ் வளரச் செய்தவா் திருப்பனந்தாள் காசி மட அதிபா் முத்துக் குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் பு... மேலும் பார்க்க

‘சுயமரியாதையுடன் வாழ கல்வியே துணை நிற்கும்’

சிவகங்கை: கல்விதான் ஒருவரை சுயமரியாதையுடன் சொந்தக் காலில் நிற்க வைக்கும் என்றாா் எழுத்தாளா் பாரதி கிருஷ்ணகுமாா்.சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு என்ற பண்பாட்டு ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் 5 போ் கைது

சிவகங்கை: சிவகங்கை அருகே நிகழ்ந்த இரு கொலைச் சம்பவங்களில் தொடா்புடைய 5 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை செய்தனா்.சிவகங்கை அருகேயுள்ள சக்கந்தி பகுதியைச் சோ்ந்த மனோஜ்பிரபு கடந... மேலும் பார்க்க