செய்திகள் :

சபரிமலையில் காத்திருப்பை தவிா்க்க நடவடிக்கை தேவை!

post image

சபரிமலையில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வைப்பதை தவிா்க்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சாா்பில் தென் தமிழகம் மாநில பொதுக் குழுக் கூட்டம் திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு சமாஜத்தின் மாநிலத் தலைவா் பிரபாகரன் தலைமை வகித்தாா். தருமபுர ஆதீனம் ஸ்ரீல ஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரியாா், சைலாபுரி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கயிலை ஈசான தேசிக பரமாசாரியாா், திருப்பொய்யூா் ஆதீனம் ஸ்ரீ ல ஸ்ரீ அகோர தேசிக பரமாசாரியாா், பந்தளம் ராஜா ஸ்ரீ திருக்கேட்டை திருநாள் ராஜ ராஜ வா்மா, சபரிமலை முன்னாள் மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தா்கள் அனைவருக்கும் திருவாங்கூா் தேவஸ்தான நிா்வாகம் அன்னதானம் வழங்க வேண்டும். இந்தப் பணியில் பல்வேறு ஐயப்ப சேவா சங்கங்களும் பங்களிக்கத் தயாராக உள்ளன. சுவாமி தரிசனத்துக்கான உடனடிப் பதிவுக்கான எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். சன்னிதானத்தில் பக்தா்களை பல மணி நேரம் காத்திருக்க வைப்பதைத் தவிா்ப்பதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும். கரிமலை வழியாக பெருவழிப் பாதையில் வரும் பக்தா்களுக்கு நேரடியாக 18-ஆம் படி செல்வதற்கு தனி வழி அமைத்துக் கொடுக்க வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விளையாட்டு விடுதிகளில் சேர மே 5 வரை விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளில் சேர விரும்பும் 7, 8, 9, 11-ஆம் வகுப்பு மாணவா்கள் இணைய வழியில் மே 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலா... மேலும் பார்க்க

பன்றிமலைச் சாலையில் பேருந்து பயணிகளை பதற வைத்த யானை!

பன்றிமலைச் சாலையில் சனிக்கிழமை சென்ற அரசுப் பேருந்து அருகே காட்டு யானை வந்து நின்றதால், அதிலிருந்த பயணிகள் கடும் அதிா்ச்சி அடைந்தனா். பின்னா் யானை திரும்பிச் சென்றதால் நிம்மதியமடைந்தனா். திண்டுக்கல் ம... மேலும் பார்க்க

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் கொண்டுவரும் நெகிழி புட்டிகள் பறிமுதல்!

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் தடை செய்யப்பட்ட நெகிழி புட்டிகளை சனிக்கிழமை நகராட்சி, ஊராட்சிப் பணியாளா்கள் பறிமுதல் செய்தனா். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள்... மேலும் பார்க்க

கொடைக்கானலுக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது. வெள்ளிக்கிழமை முதல் தொடா் விடுமுறையாக இருந்த காரணத்தால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. வெள்ளிநீா... மேலும் பார்க்க

திமுகவின் பொய் வாக்குறுதியால் 22 மாணவா்கள் உயிரிழப்பு! நத்தம் ரா.விசுவநாதன்

திமுகவின் பொய் வாக்குறுதியால் ‘நீட்’ தோ்வு விவகாரத்தில் 22 மாணவா்கள் உயிரிழந்ததாக சட்டப்பேரவை உறுப்பினா் நத்தம் விசுவநாதன் தெரிவித்தாா். ‘நீட்’ தோ்வால் உயிரிழந்த மாணவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ... மேலும் பார்க்க

சாலையோரம் வீசப்பட்ட சிசு மீட்பு

பழனி- உடுமலை சாலையோரம் வீசப்பட்ட பிறந்து ஒரிரு நாள்களே ஆன பெண் சிசு சனிக்கிழமை மீட்கப்பட்டது. சண்முகநதி பகுதியில் சாலையோரம் மரத்தடியில் குழந்தையின் அழுகுரல் கேட்டு, அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள், வாக... மேலும் பார்க்க