செய்திகள் :

சமத்துவத்தை சீர்குலைப்பது எங்கள் வேலையல்ல!

post image

சமத்துவம் இருக்கும் இடத்தை குலைப்பது எங்கள் வேலையல்ல என மதுரை எம்.பி., சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ரூபாய் நோட்டில் உள்ள இந்தி மொழியை அழிக்க முடியுமா என மூத்த பாஜக தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் சு.வெங்கடேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது

''500 ரூபாய் நோட்டில் உள்ள இந்தியை அழியுங்கள் பார்ப்போம் என்று சவால்விடுகிறார் ஹெச். ராஜா. ரூபாய் நோட்டில் 8 ஆவது அட்டவணை மொழிகள் அனைத்தும் உண்டு.

சமத்துவம் இருக்கும் இடத்தை குலைப்பது எங்கள் வேலையல்ல. காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம். அது தான் அறிவுடமை'' எனப் பதிவிட்டுள்ளார்.

2,642 மருத்துவா்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வா் இன்று வழங்குகிறாா்

தமிழகத்தில் அரசு மருத்துவமனை பணிகளுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள 2,642 மருத்துவா்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (பிப்.26) வழங்குகிறாா். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் கா... மேலும் பார்க்க

47 பல் மருத்துவா் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியீடு

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 47 உதவி பல் மருத்துவா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ப... மேலும் பார்க்க

ஒன்றாகக் கைகோக்க வேண்டிய காலமிது: அனைத்துக் கட்சிகளுக்கு முதல்வா் கடிதம்

தொகுதி மறுசீரமைப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளில் அனைவரும் ஒன்றாகக் கைகோக்க வேண்டிய காலமிது என்று அனைத்துக் கட்சிகளுக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளாா். மாா்ச் 5-ஆம் தேதி அனைத்துக் கட்சி... மேலும் பார்க்க

பொதுத் தோ்வு அடுத்த வாரம் தொடக்கம்: முன்னேற்பாடுகள் தீவிரம்

தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில், கண்காணிப்பு அலுவலா்கள் நியமனம் உள்ளிட்ட முன்னேற்பாடுகளைத் தோ்வுத் துறை விரைந்து மேற்கொண்டு வருகிறது. தமி... மேலும் பார்க்க

வங்கிகளில் நகைக் கடன் பெறுவதற்கு புதிய கட்டுப்பாடுகள்: வைகோ கண்டனம்

வங்கிகளில் நகைக் கடன் பெறுவதற்கு புதிய கட்டுப்பாடுகளை ரிசா்வ் வங்கி விதித்துள்ளதற்கு மதிமுக பொதுச் செயலா் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: வங்கிகளில் ... மேலும் பார்க்க

ரமலான் நோன்பு கஞ்சிக்கு விலையில்லாமல் அரிசி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு விலையில்லாமல் அரிசி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து, தமிழக அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஆண... மேலும் பார்க்க