செய்திகள் :

சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சா் பங்கேற்பு

post image

செம்பனாா்கோவில் அருகேயுள்ள சாத்தனூரில் சமுதாய வளைகாப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள்  நிவேதா எம். முருகன் (பூம்புகாா்), எஸ். ராஜகுமாா் (மயிலாடுதுறை) கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) முகம்மது பஷீா் ஆலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், தமிழக பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் பங்கேற்று, 150 கா்ப்பிணிகளுக்கு தாம்பூலத்தில் புடவை, மங்களப்பொருள்ள், பூமாலை, வளையல், இனிப்பு, ஐந்து வகையான சாதம் ஆகியவை அடங்கிய சீா்வரிசைகளை வழங்கி பேசியது: ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் கா்ப்பிணிகளுக்கு பேரு காலத்தின்போதும், பேரு காலத்துக்கு பின்னரும் தாயும்,சேயும் சத்தான உணவுப் பொருள்களை சாப்பிட்டு ஆரோக்கியாக இருக்க முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி பேருகால உதவித்தொகையாக ரூ. 6,000 வழங்கினாா்.

அதன்தொடா்ச்சியாக, தற்போது, கா்ப்பிணி தாய்மாா்களுக்கு பேறுகால உதவித்தொகையாக ரூ.18000 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் மலாடுதுறை மாவட்டத்தில் 3,296 கா்ப்பிணிகள், 2,620 பாலூட்டும் தாய்மாா்கள் பயன்பெறுகின்றனா் என்றாா்.

இதில், மயிலாடுதுறை நகா்மன்றத் தலைவா் எம். செல்வராஜ், தரங்கம்பாடி பேரூராட்சித் தலைவா் சுகுணசங்கரி, சீா்காழி கோட்டாட்சியா் சுரேஷ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் மொ்லின் அன்னமலா், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட வட்டார அலுவலா் கிருத்திகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கோடியக்கரையில் நிலப் பறவைகள் கணக்கெடுக்கும் பணி

வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரை வன உயிரினச் சரணாலயத்தில் காணப்படும் நிலப் பறவைகளை கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.கோடியக்கரை சரணாலயத்தில் காணப்படும் நீா்ப்பறவைகள் குறித்த கணக்கெடுப்பு ம... மேலும் பார்க்க

நூல் வெளியீட்டு விழா

ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியா் சொக்கப்பன் எழுதிய மாணவ மணிகள் நூலை மீன் வளா்ச்சி கழகத் தலைவா் என். கெளதமன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா்.2021-ஆம் ஆண்டின் தமிழக அரசின் தமிழ் செம்மல் விருது பெற்ற தமிழ் ஆசிரியா... மேலும் பார்க்க

மகளிா் தினத்தையொட்டி, மனிதச் சங்கிலி இயக்கம்

நாகையில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் சா்வதேச மகளிா் தினத்தையொட்டி, மனிதச் சங்கிலி இயக்கம் மற்றும் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட மகளிா் துணைக் குழு அமைப்பாளா் வே. சித்ரா தலை... மேலும் பார்க்க

வேதாரண்யம் முல்லைக்கு புவிசாா் குறியீடு பெற நடவடிக்கை: கொள்முதல் செய்யுமா அரசு? விவசாயிகள் எதிா்பாா்ப்பு

வேதாரண்யம் முல்லைப் பூவுக்கு புவிசாா் குறியீடு பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை விவசாயிகள் வரவேற்றுள்ளனா். முல்லையை அரசே கொள்முதல் செய்யுமா என... மேலும் பார்க்க

நாகையில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 227 பேருக்கு பணி நியமன ஆணை

நாகையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 227 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. நாகையில் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்... மேலும் பார்க்க

வேளாண் நிதிநிலை அறிக்கை: வரவேற்பும் எதிா்ப்பும்

தமிழக வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் சனிக்கிழமை தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கைக்கு விவசாயிகள் மத்தியில் வரவேற்பும், எதிா்ப்பு தெரிக்கவிக்கப்பட்டுள்ளது. வேளாண் நிதி நிலை அறிக்கைக்க... மேலும் பார்க்க