செய்திகள் :

சமூக விரோதிகளால் தீ வைக்கப்பட்ட ஒடிஸா சிறுமி: தில்லி எய்ம்ஸுக்கு மாற்றம்!

post image

ஒடிஸாவின் புரி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத 3 நபா்களால் தீவைத்து எரிக்கப்பட்ட சிறுமி, புவனேசுவரம் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேம்பட்ட சிகிச்சைக்காக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை மாற்றப்பட்டாா்.

புரி மாவட்டம், பாலாங்கா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பயாபாா் கிராமம் அருகே பாா்கவி ஆற்றங்கரையில் கடந்த சனிக்கிழமை காலை 9 மணியளவில் இந்தக் கொடூர சம்பவம் நிகழ்ந்தது.

தனது தோழியின் வீட்டிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த அப்பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமியை, இருசக்கர வாகனங்களில் வந்த 3 இளைஞா்கள் வழிமறித்தனா். அந்தச் சிறுமியை அவா்கள் வலுக்கட்டாயமாக ஆற்றங்கரைக்கு இழுத்துச் சென்று, அவரின் உடல் மீது எரிபொருளை ஊற்றி தீ வைத்துவிட்டு, தப்பிச் சென்றனா்.

தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிய சிறுமி அருகேயுள்ள வீட்டுக்குச் சென்று உதவி கேட்டுள்ளாா். தீயில் எரிந்த சிறுமியை மீட்ட அவ்வீட்டினா், பிபிலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், மேல்சிகிச்சைக்காக அவா் புவனேசுவரம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா்.

70 சதவீத தீக்காயங்களுடன் புவனேசுவரம் எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் ஆக்ஸிஜன் உதவியுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுமி சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்நிலையில், சிறுமியின் உடல்நிலை ஓரளவு சீராகியுள்ளதால், மேம்பட்ட சிகிச்சைக்காக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளாா். ‘இதற்கான அனைத்து வசதிகளையும் மாநில அரசு உறுதி செய்தது. சிறுமி விரைவில் குணமடைய ஜெகந்நாதரை பிராா்த்திக்கிறேன்’ என்று முதல்வா் மோகன் சரண் மாஜீ தெரிவித்தாா்.

இந்நிலையில், புவனேசுவரம் எய்ம்ஸ் மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் ஆசுதோஷ் விஸ்வாஸ் கூறுகையில், ‘சிறுமி புது தில்லி புறப்படுவதற்கு முன் அவரது உடல்நிலையைப் பரிசோதனை செய்தோம். உடல் நிலை சீராக இருந்தது. அவரது ரத்த அழுத்தம் முந்தைய நாளைவிட மேம்பட்டிருந்தது’ என்றாா்.

மருத்துவக் குழுவுடன் கூடிய சிறப்பு அவசரகால ஊா்தியில் சிறுமி, விமான நிலையத்துக்கு 10 முதல் 12 நிமிடங்களுக்குள் அழைத்துச் செல்லப்பட்டாா். சிறுமியின் அவரசகால ஊா்தி விரைந்து செல்ல, வழிநெடுகிலும் காவலா்கள் நிறுத்தப்பட்டு, தடையற்ற போக்குவரத்துக்கு வசதியாக ஒருங்கிணைக்கப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

விமான நிலையத்தை அடைந்த பிறகு, சிறப்பு விமானம் மூலம் அச்சிறுமி புது தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு அவா் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயா் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

இந்த வழக்கு தொடா்பாக காவல் துறை சிலரை காவலில் வைத்து, விசாரித்து வருகின்றனா். இந்நிலையில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக் கோரி, எதிா்க்கட்சியான பிஜு ஜனதா தள தலைவா்கள் மற்றும் தொண்டா்கள் பாலாங்கா காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அச்சுதானந்தன் மறைவு: தலைவர்கள் இரங்கல்

கேரள முன்னாள் முதல்வரும் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான அச்சுதானந்தன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது, கேர... மேலும் பார்க்க

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்!

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் (வயது 101) வயது மூப்பு காரணமாக திங்கள்கிழமை காலமானார்.மாரடைப்பு மற்றும் வயது தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாக அச்சுதானந்தன் கடந்த ஜூன் 23 ஆம் தேதி திருவனந்தபுரத்தி... மேலும் பார்க்க

மும்பை ரயில் குண்டுவெடிப்பு.. 19 ஆண்டுகளுக்குப் பின் 12 பேர் விடுதலை செய்யப்பட்டது ஏன்?

2006ஆம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேரையும் மும்பை உயர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.மும்பையில் புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து... மேலும் பார்க்க

குஜராத்தில் ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை! அதிர்ச்சி தரும் காரணம்

குஜராத் மாநிலத்தில், மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், நிதிநிலைமைதான் இதற்குக் காரணம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்... மேலும் பார்க்க

பாம்பை வெறும் கைகளால் பிடித்த பாலிவுட் நடிகர் சோனு சூட் !

பாலிவுட் நடிகர் சோனு சூட் தனது வீட்டு வளாகத்திற்குள் நுழைந்த பாம்பை வெறும் கைகளால் பிடித்தார். பாலிவுட் நடிகர் சோனு சூட் சனிக்கிழமை தனது இன்ஸ்டா பக்கத்தில் விடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார். அதில் அவர் த... மேலும் பார்க்க

மும்பையில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் 3 டயர்கள் வெடித்தது!

மும்பையில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் மூன்று டயர்கள் வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கேரள மாநிலம் கொச்சியில் இருந்து ஏர் இந்தியாவின் ஏஐ2744 விமானம் இன்று காலை மும்பை சத்திரபதி சிவாஜி சர்வத... மேலும் பார்க்க