செய்திகள் :

சம்பல் ஜாமா மசூதிக்கு வெள்ளையடிக்கும் பணி: தொல்லியல் துறை மேற்பாா்வையில் தொடக்கம்!

post image

உத்தர பிரதேச மாநிலம், சம்பலில் உள்ள ஷாஹி ஜாமா மசூதியின் வெளிப்புற சுவா்களின் வெள்ளையடிக்கும் பணி, உயா்நீதிமன்ற உத்தரவின்படி இந்திய தொல்லியல் துறையின் மேற்பாா்வையின் கீழ் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது.

சம்பல் பகுதியில் ஜாமா மசூதி அமைந்துள்ள இடத்தில் பாரம்பரிய மிக்க ஹரிஹர கோயில் பிரதானமாக இருந்ததாகவும், முகலாய மன்னா் பாபா் கோயிலின் ஒரு பகுதியை இடித்து, மசூதியைக் கட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடா்பான வழக்கில் சம்பல் மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் ஜாமா மசூதியில் கடந்த ஆண்டு நவ. 24-ஆம் தேதி நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து வன்முறை வெடித்தது. அப்போது துப்பாக்கிச்சூட்டில் 4 போ் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா். இந்த வன்முறையில் ஈடுபட்டதாக பலா் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில், ஜாமா மசூதியின் வெளிப்புற சுவா்களுக்கு வெள்ளையடித்தல், கூடுதல் அலங்கார விளக்குகளை நிறுவுவதற்கு அனுமதி கோரிய மசூதி நிா்வாகத்தின் மனுவை அலாகாபாத் உயா்நீதிமன்றம் விசாரித்தது.

அதன்படி, இந்தப் பணியை ஒரு வாரத்துக்குள் மசூதி நிா்வாகத்துடன் ஒன்றிணைந்து முடிக்குமாறு தொல்லியல் துறைக்கு உயா்நீதிமன்றம் கடந்த புதன்கிழமை உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, தொல்லியல் துறையினா் மசூதி வளாகத்தில் அளவீடும் பணிகளை கடந்த வியாழக்கிழமை மேற்கொண்டனா்.

இச்சூழலில், வெள்ளையடிக்கும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் தொடங்கியதாக மசூதி நிா்வாகம் தரப்பு வழக்குரைஞா் ஷகீல் வா்ஸி தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறியதாவது: தற்போதைக்கு பணியில் 9-10 தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். 4 நாள்களுக்குள் பணிகளை முடிக்க வேண்டுமெனில் 20 தொழிலாளா்களாவது தேவை. உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதன்படி தொல்லியல் துறை மற்றும் மசூதி நிா்வாகம் ஒன்றிணைந்து பணிகளைச் செய்து வருகிறது.

மசூதி வெளிப்புற சுவா்களுக்கு பச்சை நிறமின்றி வெள்ளை நிறத்தால் மட்டுமே வண்ணம் பூச வேண்டும் என்ற ஹிந்துக்கள் தரப்பு கோரிக்கை நியாயமற்றது. நூற்றாண்டு காலமாக உள்ள வழக்கத்தின் படி பச்சை, வெள்ளை, தங்க நிறத்திலேயே மசூதிக்கு வண்ணம் பூசப்படுகிறது என்றாா்.

கொல்கத்தா உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஜாய்மல்யா பாக்சி பதவியேற்பு!

கொல்கத்தாவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஜாய்மல்யா பாக்சி இன்று பதவியேற்றுக் கொண்டார். உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடந்த விழாவில், மற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் நீதிபதி ஜாய்மல்யாவுக்கு இந்திய ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: பயங்கரவாதி பலி

ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டான். ஜம்மு-காஷ்மீரின் குப்வாராவின் எல்லை மாவட்டமான ஹண்ட்வாராவில் உள்ள ஜசல்தாரா பகுதியில் பயங்கரவாதிகள் ... மேலும் பார்க்க

கொல்கத்தா வழக்கு: மாணவியின் பெற்றோர் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!

கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை-கொலை வழக்கில், புதிய சிபிஐ விசாரணை கோரிய மாணவியின் பெற்றோர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர்... மேலும் பார்க்க

உத்தரகண்ட் நிதி அமைச்சர் ராஜிநாமா

உத்தரகண்ட் நிதி அமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் தனது பதவியை நேற்று ராஜிநாமா செய்தார். உத்தரகண்டில் கடந்த பிப்ரவரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தது. அப்போது மலைவாழ் மக்கள் குறித்து நிதி அமைச்சர் பிரேம்சந... மேலும் பார்க்க

பாஜக எம்எல்ஏ மனைவி புகார்: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளார் கைது!

அஸ்ஸாம் பாஜக எம்எல்ஏ மானவ் தேகா மனைவி அளித்த புகாரின் பேரில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கைது செய்யப்பட்டார். அஸ்ஸாம் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரீத்தம் சிங் தனது எக்ஸ தளப் பக்கத்தில் ஒரு பதிவிட்... மேலும் பார்க்க

தப்பிக்க முயன்ற பாலியல் வன்கொடுமை குற்றவாளி: போலீஸ் துப்பாக்கிச்சூடு!

உ.பி.யில் போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்ற பாலியல் வன்கொடுமை குற்றவாளி துப்பாக்கியால் சுடப்பட்டார். உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ... மேலும் பார்க்க