செய்திகள் :

சம்பளத்தை உயர்த்த மாட்டேன்: சசிகுமார்

post image

நடிகர் சசிகுமார் தன் சம்பளத்தை உயர்த்தப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று ரூ. 25 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப்படமாகியுள்ளது.

இதுவரை சசிகுமார் நாயகனாக நடித்த படங்களிலேயே இதுவே அதிக வசூலைக் கொடுத்த படமென்பதால் சசி மகிழ்ச்சியில் இருக்கிறார்.

இந்த நிலையில், படத்தின் வெற்றிவிழாவில் பேசிய சசிகுமார், “குட்டிப்புலி, சுந்தர பாண்டியன் ஆகிய படங்களே நான் நடித்ததிலேயே அதிக வசூலைப் பெற்றிருந்தன. ஆனால், டூரிஸ்ட் ஃபேமிலி இவற்றைக் கடந்துவிட்டது. பலரும் இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து என் சம்பளத்தை உயர்த்திவிடுவீர்களா? எனக் கேட்டார்கள். கண்டிப்பாக உயர்த்தமாட்டேன்.

ஏனென்றால், நான் தோல்வியடைந்திருக்கிறேன். டூரிஸ்ட் ஃபேமிலி முதல் நாளில் ரூ. 2 கோடி வரை வசூலித்திருக்கலாம். நான் நடித்த ஒரு படமே ரூ. 2 கோடிதான் வசூலித்திருக்கிறது. ஒரு நடிகரிடம் சரியாக எவ்வளவு வசூலிக்கிறது எனச் சொன்னால்தானே அவர்கள் தங்களின் சம்பளம் குறித்து சிந்திப்பார்கள். “ எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: சர்ச்சையைக் கிளப்பிய சந்தானத்தின் புதிய பட பாடல்!

விஜய் ஆண்டனியின் மார்கன் வெளியீட்டுத் தேதி!

விஜய் ஆண்டனி நடித்துள்ள புதிய படமான ‘மார்கன்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கதாநாயகனாக தனது 12-வது படமான ‘ககன மார்கன்’ திரைப்படத்தில் நடி... மேலும் பார்க்க

கிஸ் வெளியீடு அறிவிப்பு!

நடிகர் கவின் நடிப்பில் உருவான கிஸ் திரைப்படத்தின் வெளியீடு அறிவிக்கப்பட்டுள்ளது. நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோரின் நடிப்பில் ‘கிஸ்’ எனும் புதிய படம் உர... மேலும் பார்க்க

விடாமுயற்சி, வீர தீர சூரன் வெற்றிப்படங்கள் இல்லை: திருப்பூர் சுப்ரமணியம்

இந்தாண்டு வெளியான திரைப்படங்களின் வெற்றி, தோல்வி குறித்து பிரபல திரையரங்க உரிமையாளர் திருப்பூர் சுப்ரமணியம் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் இந்தாண்டு இதுவரை வெளியான திரைப்படங்களில் ஒரு சில படங்களே ரசிக... மேலும் பார்க்க

ரூ. 100 கோடி இழப்பீடு வேண்டும்... சிக்கலில் சந்தானம் படம்!

நடிகர் சந்தானத்தின் புதிய படத்திற்கு பெரிய சிக்கல் எழுந்துள்ளது. சந்தானம் கதாநாயகனாக நடித்து, பிரேம் ஆனந்த் இயக்கிய ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவர்களது கூட்டணியில் உருவான ப... மேலும் பார்க்க

கனா தொடர் நாயகிக்கு ஆண் குழுந்தை!

மருத்துவரும் தொடர் நடிகையுமான தர்ஷனா அசோகனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீதானே எந்தன் பொன் வசந்தம் தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை தர்ஷனா அச... மேலும் பார்க்க

காதலியைக் கரம் பிடித்த சுந்தரி தொடர் நடிகர்!

நடிகர் ஜிஷ்ணு மேனன் தனது நீண்ட நாள் காதலி அபியாத்ராவை கரம் பிடித்தார்.சுந்தரி தொடரில் கார்த்திக் என்ற பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் ஜிஷ்ணு மேனன். எதிர்மறையான பாத்திரத... மேலும் பார்க்க