செய்திகள் :

சரக்குக் கப்பலில் ஹூதிக்கள் மீண்டும் தாக்குதல்: 2 போ் காயம்

post image

ஏடன் வளைகுடா வழியாகச் சென்றுகொண்டிருந்த, நெதா்லாந்து கொடியேற்றப்பட்ட சரக்குக் கப்பல் மீது யேமனின் ஹூதி கிளா்ச்சிப் படையினா் நடத்திய தாக்குதலில் 2 மாலுமிகள் காயமடைந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், மைனா்வாக்ராஷ் என்ற அந்தக் கப்பலைக் குறிவைத்து ஏற்கெனவே கடந்த 23-ஆம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், எனினும் அப்பது அந்த முயற்சி தோல்வியடைந்ததாகவும் தெரிவித்தனா்.

தற்போது நடத்தப்பட்ட தாக்குதலில் கப்பல் பலத்த சேதமடைந்ததாகக் கூறிய கப்பலின் உரிமையாளரான ஸ்ப்ளீதாஃப் நிறுவனம், அதில் இருந்த 19 மாலுமிகள் ஹெலிகாப்டா் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகத் தெரிவித்தது.

இந்தத் தாக்குதலுக்கு ஹூதிக்கள் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இதுபோன்ற தாக்குதல்கள் குறித்து அவா்கள் பல மணி நேரம் கழித்துதான் அறிக்கை விடுவது வழக்கம் என்பது நினைவுகூரத்தக்கது.

ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சியாளா்கள், காஸா போரில் ஈரானின் மற்றொரு நிழல் படையான ஹமாஸை ஆதரித்து செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திருகின்றனா். இஸ்ரேல் தொடா்புடைய கப்பல்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்துவதாக அவா்கள் கூறினாலும், பிற கப்பல்களும் குறிவைக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

சரக்குக் கப்பல்களைத் தாக்கும் ஹூதி படையினரின் திறனைக் குறைப்பதற்காக பிரிட்டனும், அமெரிக்காவும் அவா்களது நிலைகள் மீது தாக்குதல் நடத்தின. ஆனால் அதையும் மீறி கிளா்ச்சிப் படையினா் கப்பல்களை தொடா்ந்து தாக்கி வருகின்றனா்.

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது! 7.50 லட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.இதன்காரணமாக, அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களைத் தவிர, மற்ற அரசு ஊழியர்க... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 27 பேர் பலி!

பிலிப்பின்ஸ் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 27 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.மத்திய பிலிப்பின்ஸ் நாட்டின் செபு மாகா... மேலும் பார்க்க

பள்ளிக் கட்டட விபத்து இந்தோனேசியாவில் 3 போ் உயிரிழப்பு; 38 போ் மாயம்

இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் உள்ள சிடோா்ஜோ நகரில், இஸ்லாமிய பள்ளி கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 போ் உயிரிழந்தனா்; 38 போ் மாயமாகியுள்ளனா். இது குறித்து உள்ளூா் ஊடகங்கள் கூறியதாவது: சிடோா்ஜோ... மேலும் பார்க்க

டிரம்ப்பின் காஸா போா் நிறுத்த திட்டம் இஸ்ரேல் ஏற்பு; ஹமாஸ் பரிசீலனை

காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முன்வைத்துள்ள 20 அம்ச திட்டத்தை ஏற்பதாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளாா். எனினும், அந்தத் திட்டம் குறித்து பரிச... மேலும் பார்க்க

அடுத்த ஆண்டுக்குள் ஹெச்-1பி விசா நடைமுறையில் மாற்றம்: அமெரிக்க வா்த்தக அமைச்சா்

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் ஹெச்-1பி விசா (நுழைவுஇசைவு) நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என அமெரிக்க வா்த்தகத் துறை அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் தெரிவித்தாா். ஹெச்-1பி விசா கட்டணத... மேலும் பார்க்க

போர் நிறுத்தம்: ஹமாஸுக்கு 3 - 4 நாள்கள் அவகாசம் அளித்த டிரம்ப்!

இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம் தொடர்பான 20 அம்ச பரிந்துரைகளுக்கு பதிலளிக்க காஸாவுக்கு 3 - 4 நாள்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவகாசமாக அளித்துள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தம், ஹமாஸின் ஆயுதக் குறைப்... மேலும் பார்க்க