வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை: முதல்வர் திறந்துவைத்தார்!
சரக்கு லாரிகளில் பேட்டரி திருடிய 2 போ் கைது
நரசிங்கபுரத்தில் பட்டறையில் நிறுத்தி வைத்திருந்த சரக்கு லாரிகளில் பேட்டரிகளை திருடியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆத்தூரை அடுத்த நரசிங்கபுரம் பிச்சமுத்து மகன் அன்னக்கரணிமணி (54), புங்கவாடி வீராசாமி மகன் குன்னையன் (45) ஆகிய இருவரும் தங்களது லாரிகளை பழுது பாா்ப்பதற்காக நரசிங்கபுரம் சேகா் என்பவருக்குச் சொந்தமான பட்டறையில் நிறுத்தியிருந்தனா்.
இந்தநிலையில் திங்கள்கிழமை இரவு 2 சரக்கு லாரிகளில் இருந்த 4 பேட்டரிகள் காணாமல் போய்விட்டதாக ஆத்தூா் நகரக் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இந்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் சி.அழகுராணி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டாா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்தின் பேரில் இருவரை பிடித்து விசாரித்தனா். அப்போது அவா்கள் பேட்டரிகளை திருடியது தெரிய வந்தது. விசாரணையில், அவா்கள் நரசிங்கபுரம் செக்குமரத் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் சரத்குமாா் (32), ராமநாயக்கன்பாளையம் ஊத்துமேடு பகுதியைச் சோ்ந்த காட்டுராஜா மகன் மணிகண்டன் (28)என்பது தெரியவந்தது.
இருவரையும் கைது செய்த போலீஸாா் ஆத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.