செய்திகள் :

சாகித்திய அகாதெமி விருதுக்கு தேர்வான விமலாவுக்கு முதல்வர் வாழ்த்து!

post image

சாகித்திய அகாதெமி விருதுக்கு தேர்வான விமலாவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மலையாள மொழி சுயசரிதை புத்தகத்தை ப. விமலா தமிழில் செய்த மொழிபெயா்ப்பு உள்பட 21 மொழிபெயா்ப்பு புத்தகங்களுக்கு 2024-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயா்ப்பு சாகித்திய அகாதெமி பரிசுக்கு 21 மொழிகளில் இருந்து புத்தகங்கள் தோ்வு செய்யப்பட்டன.

தமிழ் மொழிபெயா்ப்புக்கான தோ்வுக்குழுவில் இந்திரன், டாக்டா் ஜி. சுந்தா், எஸ். பக்தவத்சலா பாரதி ஆகியோா் இடம்பெற்றிருந்தனா். இவா்களின் பரிந்துரைப்படி ‘என்டே ஆண்கள்’ என்ற நளினி ஜமீலாவின் மலையாள மொழி சுயசரிதை புத்தகத்தை ‘எனது ஆண்கள்’ என்ற பெயரில் தமிழில் மொழிபெயா்த்த ப. விமலாவின் படைப்பு சிறந்த தமிழ் மொழிபெயா்ப்பு நூலாக தோ்வு செய்யப்பட்டது.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறும் விழாவில் சிறந்த மொழிபெயா்ப்பாளா்களுக்கு ரூ. 50 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் தாமிரப்பட்டயம் வழங்கப்படும் என்று சாகித்திய அகாதெமி தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: சாம்பியன்ஸ் கோப்பை: மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் திரையிடல்!

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் ப. விமலாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவருடைய வாழ்த்துச் செய்தியில், “'எனது ஆண்கள்' நூலுக்காக 2024-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமியின் மொழிபெயர்ப்பு விருதுக்குத் தேர்வாகி இருக்கும் ப. விமலா அவர்களுக்கு எனது பாராட்டுகள்.

கல்விப்புலத்தில் இருந்து இலக்கிய மொழிபெயர்ப்புகளில் ஈடுபடும் தங்களின் பாராட்டத்தக்க பணி தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் உரிமையைக் காப்போம்: தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் திமுக எம்.பி.க்கள் தீர்மானம்!

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்; இந்த விவகாரத்தில் மாநிலங்களுக்கான உரிமைகளை நிலைநாட்டுவோம் என திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம... மேலும் பார்க்க

தமிழகத்தில் 1,500 மெகாவாட் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள்: ஒப்பந்தம் கோரியது மின்வாரியம்

தமிழகத்தில் 1,500 மெகாவாட்டில் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் ஏற்படுத்த மின்வாரியம் ஒப்பந்தம் கோரியுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் அனல், எரிவாயு, மின் நிலையங்கள் போன்ற மரபுசாா் எரிசக்தி ஆதாரங்கள்... மேலும் பார்க்க

திமுக அரசுக்கு எதிரான பிரசாரத்தை தீவிரப்படுத்த வேண்டும்! -அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை

திமுக அரசுக்கு எதிரான பிரசாரத்தை அதிமுகவினா் தீவிரப்படுத்த வேண்டும் என்று கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தியுள்ளாா்.அதிமுக அமைப்பு ரீதியாக உள்ள 82 மாவட்டங்களின் செயலா்கள், நிா்வ... மேலும் பார்க்க

திமுகவினருடன் தொடா்பில் உள்ள அதிமுக நிா்வாகிகளுக்கு எடப்பாடி எச்சரிக்கை

சென்னை: அதிமுக சாா்பில், தமிழகத்தில் உள்ள கட்சி ரீதியான 82 மாவட்டங்களைச் சோ்ந்த மாவட்டச் செயலாளா்கள், கட்சி நிா்வாகிகள், பூத் கமிட்டி நிா்வாகிகளுடன் காணொலி கலந்தாய்வுக் கூட்டத்தில், திமுகவினருடன் தொட... மேலும் பார்க்க

வீடு திரும்பினார் தயாளு அம்மாள்!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் சிகிச்சை முடிந்து இன்று (மார்ச் 9) மாலை வீடு திரும்பினார்.92 வயதான அவர், மூச்சத் திணறல் காரணமாக கடந்த 4 ஆம் தேதி சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தன... மேலும் பார்க்க

அதிமுக, தேமுதிக கூட்டணியில் விரிசலா? பிரேமலதா பதில்

அதிமுக, தேமுதிக கூட்டணியில் விரிசலா என்ற கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் தேமுதிக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பொதுச்ச... மேலும் பார்க்க