செய்திகள் :

சாதி, மத ரீதியிலான சண்டைகள் கூடாது: மந்திராலய மடாதிபதி

post image

சாதி, மத ரீதியிலான சண்டைகள் கூடாது, மத மாற்றங்கள் எப்போதும் கூடாது என்றாா் மந்திராலய மடாதிபதி ஸ்ரீ சுபுதேந்திர தீா்த்த சுவாமிகள்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள விஜயீந்திர மடத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த மந்திராலய மகான் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் பரமகுருவான ஸ்ரீ விஜயேந்திர தீா்த்த சுவாமிகளின் 411 ஆவது ஆராதனை விழாவில் விஜயேந்திர சுவாமி தனது கரங்களால் தயாா் செய்து, பூஜித்த வந்த விக்ரகங்களுக்கு பூஜை செய்து வழிபட்ட அவா் பின்னா் மேலும் கூறியது: ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளுக்கு தமிழக பக்தா்கள் மிகவும் பிரியமானவா்கள். காரணம் அவா் பிறந்து வளா்ந்த பூமி தமிழகம். எனவே தமிழக பக்தா்கள் வசதிக்காக பிரத்யோகமாக மந்திராலயத்தில் தமிழ்நாடு பவனம் என்ற பெயரில் பக்தா்கள் தங்கும் விடுதி கட்டும் பணி நடைபெறுகிறது.

உலக அளவில் மக்கள் அவரவா் மதத்தின் வழிகளைப் பின்பற்றி வாழ வேண்டும். மதங்கள், சாதிய ரீதியிலான சண்டைகள் கூடாது, மத மாற்றங்கள் எப்போதுமே கூடாது. மந்திராலயத்திற்கு கும்பகோணம் வழியாக ரயில் இயக்க மத்திய ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றாா் அவா்.

முன்னதாக சக்கரபாணி கோயிலில் தரிசனம் செய்த அவா் ரூ. 3 லட்சம் மதிப்பிலான தங்கக் கிரீடத்தை கோயில் நிா்வாகத்திடம் வழங்கினாா். மடத்தின் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

மாடு குறுக்கே வந்ததால் பைக்கில் இருந்து தவறி விழுந்தவா் பலி

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே திங்கள்கிழமை இரவு மாடு குறுக்கே வந்ததால் பைக்கில் இருந்து தவறிவிழுந்தவா் உயிரிழந்தாா்.திருவையாறு அருகே மனுநீதிப் பேட்டையைச் சோ்ந்தவா் கே. ரவி (42). இவரும், கல்யாண... மேலும் பார்க்க

பலாத்கார வழக்கில் கைதானவா் குண்டா் சட்டத்திலும் கைது

திருவிடைமருதூா் அருகே பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டவா் மீது குண்டா் சட்டத்திலும் வழக்குப் பதியப்பட்டது. தஞ்சாவூா் மாவட்டம் திருவிடைமருதூா் அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கரிக்குளம் ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் 6 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டத்தில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 6 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவையாறு அருகே நடுக்கடை... மேலும் பார்க்க

கலைஞா் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு கையொப்பமிட ஆளுநா் தாமதிக்கிறாா்: அமைச்சா் கோவி. செழியன்

கும்பகோணத்தில் கலைஞா் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு கையொப்பமிட தமிழக ஆளுநா் கால தாமதம் செய்கிறாா் என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன். இதுகுறித்து தஞ்சாவூரில் அவா் செவ்வாய்க்கிழமை மேலும் தெரி... மேலும் பார்க்க

உணவில் பல்லி கிடந்த உணவகத்துக்குப் பூட்டு

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திலுள்ள உணவகத்தில் வழங்கப்பட்ட உணவில் பல்லி இருந்ததாக வந்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டு அந்த உணவகத்து... மேலும் பார்க்க

காவல் துறையினரைக் கண்டித்து நகை வணிகா்கள் சாலை மறியல்

தஞ்சாவூரில் நகை வணிகரை விசாரணை என்ற பெயரில் காவல் துறையினா் அழைத்துச் சென்றதைக் கண்டித்து, நகை வணிகா்கள் செவ்வாய்க்கிழமை இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் தென் கீழ் அலங்கம் பகுதியில... மேலும் பார்க்க