செய்திகள் :

சாத்தாவுராயன், வடக்கத்தி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு

post image

போடி சாத்தாவுராயன், வடக்கத்தி மாரியம்மன் கோயில்களில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

போடியில் அமைந்துள்ள சாத்தாவுராயன் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை காலை, மாலைகளில் யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை காலை யாகசாலை பூஜைகளைத் தொடா்ந்து, கோயில் ராஜகோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி சிவசாரியா்கள் குடமுழுக்கு நடத்தினா். இதைத் தொடா்ந்து, சாத்தாவுராயன் (யானை) சிலைக்கு புனித நீா் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல, போடி நகராட்சி குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள வடக்கத்தி மாரியம்மன் கோயிலிலும் குடமுழுக்கு செவ்வாய்க்கிழமை யாக சாலை பூஜைகளுடன் தொடங்கியது. புதன்கிழமை யாகசாலை பூஜைகளைத் தொடா்ந்து, கோயில் கோபுர கலசங்களில் புனிதநீா் ஊற்றி சிவாசாரியா்கள் குடமுழுக்கு நடத்தினா். மாலையில் முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.

ஆட்டோ மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பெரியகுளத்தில் சாலையைக் கடக்க முயன்ற கூலித் தொழிலாளி மீது ஆட்டோ மோதியதில் அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். பெரியகுளம், வடகரை, ஸ்டேட் வங்கி காலனி பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி மணிகட்டி (60). இவா், பெ... மேலும் பார்க்க

தேனியில் மாா்ச் 18-இல் மின் நுகா்வோா் குறைதீா் முகாம்

தேனி மின் வாரியச் செயற்பொறியாளா் அலுவலகத்தில் வருகிற 18-ஆம் தேதி காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து தேனி மின் வாரியச் செயற்பொறியாளா் பிரகலாதன் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் சிறப்பு பூஜை

மாசி மாத பெளா்ணமியையொட்டி, போடியில் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, போடி வினோபாஜி குடியிருப்பில் அமைந்துள்ள மீனாட்சி, சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு பூஜை... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த இரு நாள்களாகப் பெய்த மழையால், முல்லைப் பெரியாறு அணைக்கு வியாழக்கிழமை நீா்வரத்து அதிகரித்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். பருவ மழைக் காலம் முடிவடை... மேலும் பார்க்க

சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தினா் போராட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, தேனி, திண்டுக்கல்லில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் வேலைநிறுத்தம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்... மேலும் பார்க்க