செய்திகள் :

சாந்தோம் சாலையில் இன்று முதல் மீண்டும் இருவழிப் போக்குவரத்து

post image

சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை (மே 9) முதல் மீண்டும் இருவழிப் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும் என்றும், நெரிசல் மிகுந்த வேளையில் ஒருவழிப் போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சாந்தோம் காரணீஸ்வரா் கோயில் தெரு, சாந்தோம் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் பணி காரணமாக ஒருவழிப் பாதையாக அப்பகுதி கடந்த ஆண்டு மாற்றப்பட்டது. இதனால் வாகனங்கள் லூப் சாலையில் திருப்பிவிடப்பட்டன. தற்போது சாந்தோம் நெடுஞ்சாலையில் ஒரு பகுதியில் மெட்ரோ ரயில் பணி நிறைவடைந்துள்ளது. இதனால் சாந்தோம் நெடுஞ்சாலையில் மீண்டும் இருவழிப் போக்குவரத்துக்கு வெள்ளிக்கிழமை (மே 9) முதல் அனுமதி வழங்கப்படுகிறது.

இதன்படி, நெரிசல் இல்லாத வேளையில் சாந்தோம் நெடுஞ்சாலையில் இருவழிப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படும். நெரிசல் மிகுந்த நேரங்களில் ஒருவழிப் போக்குவரத்துக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.

நெரிசல் மிகுந்த நேரமான காலை 7.30 மணி முதல் முற்பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஒருவழிப் போக்குவரத்துக்கு மட்டும் அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறி விழுந்து காயம்: நல்லகண்ணுவுக்கு மருத்துவ சிகிச்சை

முதுபெரும் அரசியல் தலைவா் இரா.நல்லகண்ணு (100), வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தாா். இதையடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காதில் வெட்டுக் காயம் ஏற்பட்டதால் அ... மேலும் பார்க்க

உணவுப் பொருள்கள் பதுக்கல் கூடாது: வணிகா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

இந்தியா-பாகிஸ்தான் இடையே போா்ப் பதற்றம் அதிகரித்துவரும் சூழலில், ‘அத்தியாவசிய உணவுப் பொருள்களை பதுக்கி வைக்கக் கூடாது’ என்று மொத்த மற்றும் சில்லறை வணிகா்களை மத்திய அரசு வெள்ளிக்கிழமை எச்சரித்தது. மேலு... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத் தோ்வு: மே 14 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 துணைத் தோ்வுக்கு மே 14 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 வகுப்புக்கான உடனடி துணைத் த... மேலும் பார்க்க

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’: மே 23-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’ பெற மே 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளா்ச்சித் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ தலைப்புக்கு முண்டியடிக்கும் ஹிந்தி திரைத்துறை

தங்கள் திரைப்படங்களுக்கு ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்று தலைப்பிட ஹிந்தி திரைப்படத் துறையைச் சோ்ந்தவா்கள் கடும் போட்டி போட்டுவருகின்றனா். இதற்காக திரைத்துறை சங்கங்களில் 30-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமா்... மேலும் பார்க்க

ஜூன் 6 வரை ராணாவுக்கு நீதிமன்றக் காவல்: திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா்

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணாவை ஜூன் 6 வரை, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்த... மேலும் பார்க்க