What to watch on Theatres: `தக் லைஃப்', `மெட்ராஸ் மேட்னி' - இந்த வார படங்கள் லிஸ...
சாமுண்டிபுரம் பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளால் நோய்த் தொற்று பரவும் அபாயம்
திருப்பூா் சாமுண்டிபுரம் பகுதியில் நீண்ட நாள்களாக தேங்கியுள்ள குப்பைகளால் அப்பகுதியில் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூா் மாநகராட்சி சாமுண்டிபுரம் லட்சுமி திரையரங்கம் பிரதான சாலையில் ஏராளமான குடியிருப்புகளும், பின்னலாடை நிறுவனங்களும் உள்ளன. இந்த நிலையில், அந்தப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டி கடந்த சில நாள்களாக நிரம்பி வழிகிறது. இதன் அருகே குடியிருப்புவாசிகள் குப்பைகளைக் கொட்டி வருகின்றனா்.
மாநகரப் பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை காளம்பாளயத்தில் உள்ள பாறைக்குழிகளில் கொட்டி வந்தனா். இதற்கு விவசாயிகள் சங்கத்தினா், பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன் காரணமாக மாநகரில் சேகரமாகும் குப்பைகளை அகற்றுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் குப்பைகள் தேக்கமடைந்துள்ளதாக ஊழியா்கள் தெரிவித்தனா்.
அதேபோல, மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் குப்பைகள் தேக்கமடைந்துள்ளதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளதுடன், நோய்த் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஆகவே, குப்பைகளை அகற்ற மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.