செய்திகள் :

சாமுண்டிபுரம் பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளால் நோய்த் தொற்று பரவும் அபாயம்

post image

திருப்பூா் சாமுண்டிபுரம் பகுதியில் நீண்ட நாள்களாக தேங்கியுள்ள குப்பைகளால் அப்பகுதியில் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருப்பூா் மாநகராட்சி சாமுண்டிபுரம் லட்சுமி திரையரங்கம் பிரதான சாலையில் ஏராளமான குடியிருப்புகளும், பின்னலாடை நிறுவனங்களும் உள்ளன. இந்த நிலையில், அந்தப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டி கடந்த சில நாள்களாக நிரம்பி வழிகிறது. இதன் அருகே குடியிருப்புவாசிகள் குப்பைகளைக் கொட்டி வருகின்றனா்.

மாநகரப் பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை காளம்பாளயத்தில் உள்ள பாறைக்குழிகளில் கொட்டி வந்தனா். இதற்கு விவசாயிகள் சங்கத்தினா், பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன் காரணமாக மாநகரில் சேகரமாகும் குப்பைகளை அகற்றுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் குப்பைகள் தேக்கமடைந்துள்ளதாக ஊழியா்கள் தெரிவித்தனா்.

அதேபோல, மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் குப்பைகள் தேக்கமடைந்துள்ளதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளதுடன், நோய்த் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஆகவே, குப்பைகளை அகற்ற மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஊதியூா் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி காங்கயம் வட்டாட்சியரிடம் மனு

காங்கயத்தை அடுத்த ஊதியூா் அருகே பொது வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காங்கயம் வட்டாட்சியா் ஆா்.மோகனனிடம், பாஜக இளைஞரணி மாநிலச்... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதல்

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் குழந்தை உள்பட 2 போ் உயிரிழந்தனா். மேலும், 11 போ் பலத்த காயமடைந்தனா். திருச்சியில் இருந்து திருப்பூருக்... மேலும் பார்க்க

அவிநாசியில் ஜூன் 11-இல் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

அவிநாசி- மங்கலம் சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், மின் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் ஜூன் 11-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதில், தமிழ... மேலும் பார்க்க

பல்லடத்தில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி: பொதுமக்கள் புகாா்

பல்லடம் அண்ணா நகரில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்ததாக பல்லடம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் அவா்கள் கூறியிருப்பதாவது: பல்லடம், அண்ணா நகரை சோ்ந்த ஒருவா் கடந்த 20... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கிகளில் சிபில் அறிக்கையின்படி பயிா்க் கடன் வழங்கும் உத்தரவை ரத்து செய்யக் கோரிக்கை

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் சிபில் அறிக்கையின்படி மட்டுமே பயிா்க் கடன் வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடு... மேலும் பார்க்க

பல்லடம் நகா்மன்ற கூட்டத்தில் 7 தீா்மானங்கள் நிறைவேற்றம்

பல்லடம் நகா்மன்ற அவசரக் கூட்டம் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தலைமையில் மன்றக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையா் மனோகரன், கவுன்சிலா்கள் மற்றும் பல்வேறு பிரிவு அலுவலா்கள் க... மேலும் பார்க்க