செய்திகள் :

சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி மற்றும் கேலக்ஸி எம்06 5ஜி இந்தியாவில் அறிமுகம்!

post image

ஹைதராபாத்: சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்16 5ஜி மற்றும் கேலக்ஸி எம்06 5ஜி ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

கேலக்ஸி எம் தொடரின் இந்த சமீபத்திய வடிவமைப்புகள், சக்திவாய்ந்த செயல்திறன் மற்றும் மேம்பட்ட இணைப்புடன் விற்பனைக்கு வருகிறது.

அதி சக்திவாய்ந்த கேமரா

கேலக்ஸி எம்16 5ஜி ஆனது 50 எம்பி பிரதான கேமரா உடன் 5 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா உடன் வருகிறது. தெளிவான செல்ஃபிக்கு 13 எம்பி முன் கேமரா கொண்டுள்ளது.

கேலக்ஸி எம் 06 5ஜி ஆனது 50 எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் உடன் 2 எம்பி டெப்த் கேமரா உடன் வருகிறது. இதில் 8 எம்பி முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

உயர் செயல்திறன் மற்றும் 5ஜி இணைப்பு

  • மீடியாடெக் டைமன்சிட்டி 6300 செயலி மூலம் இயக்கப்படும்.

  • 6.7 இன்ச் டிஸ்பிளே.

  • ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்.

  • மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட்.

  • பிரதான கேமரா - 50 மெகாபிக்சல்

  • முன்பக்க கேமரா - 13 மெகாபிக்சல்

  • 5000 மில்லிஆம்பியர் மணிநேரம் கொண்ட பேட்டரி

  • 5ஜி நெட்வொர்க்

  • கேலக்ஸி எம்06 5ஜி ஆனது 12 5ஜி பேண்டுகளை ஆதரிக்கும்.

நீண்ட கால பேட்டரி மற்றும் பாதுகாப்பு அம்சங்கள்

இரண்டு ஸ்மார்ட்போன்களும் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் வேளையில், 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது.

கேலக்ஸி எம்16 5ஜி ஸ்மார்ட்போனுக்கான இயங்குதளத்தை மேம்படுத்தல் மற்றும் ஆறு வருட பாதுகாப்பு புதுப்பிப்புகளை சாம்சங் உறுதியளிக்கிறது.

கேலக்ஸி எம்06 5ஜி ஆனது 4 தலைமுறை இயங்குதளம் புதுப்பிப்புகளும் மற்றும் 4 வருட பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெறும்.

கேலக்ஸி எம்16 5ஜிவிலை

4 ஜிபி + 128 ஜிபி – ரூ .11,499 (ரூ .1,000 வங்கி கேஷ்பேக்)

6 ஜிபி + 128 ஜிபி – ரூ .12,999

8 ஜிபி + 128 ஜிபி – ரூ .14,499

கேலக்ஸி எம்06 5ஜி 4 ஜிபி + 128 ஜிபி – ரூ.9,499 (ரூ.500 வங்கி கேஷ்பேக்)

6 ஜிபி + 128 ஜிபி – ரூ .10,999

சாம்சங் ஸ்மார்ட்போன் அசுரத்தனமான செயல்திறன், வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன், கேலக்ஸி எம்16 5ஜி மற்றும் கேலக்ஸி எம்06 5ஜி ஆகியவை இந்திய நுகர்வோருக்கு மேம்பட்ட அனுபவத்தை வழங்கும்.

இதையும் படிக்க: கோதுமை கொள்முதல்: 31 மில்லியன் டன் இலக்கு நிர்ணயம்!

ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் ​​8.25% ஆக நிர்ணயம்!

புதுதில்லி: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 2024-25 நிதியாண்டுக்கும் ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8.25% ஆக நிர்ணயம். பிப்ரவரி 2024ல், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ம... மேலும் பார்க்க

கோதுமை கொள்முதல்: 31 மில்லியன் டன் இலக்கு நிர்ணயம்!

புதுதில்லி: 2025-26 ஏப்ரல் முதல் தொடங்கும் ரபி பருவத்தில் 31 மில்லியன் டன் கோதுமை கொள்முதல் செய்து சந்தைப்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.2024-25 பயிர் ஆண்டு அதாவது ஜூலை முதல் ஜூன் வரை, 115... மேலும் பார்க்க

கிளை நிறுவனத்தை மூடிய பிளிப்கார்ட், ஊழியர்கள் பணிநீக்கம்!

புதுதில்லி: இ-காமர்ஸ் நிறுவனமான, 'பிளிப்கார்ட்' அதன் கிளை நிறுவனமான ஏஎன்எஸ் காமர்ஸ் நிறுவனத்தை மூடுவதுடன், அதன் ஒட்டுமொத்த பணியாளர்களையும் பணிநீக்கம் செய்தது.2017ல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், தங்கள் த... மேலும் பார்க்க

முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளில் முன்னேற்றம்

கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளா்ச்சி 4.6 சதவீதமாக முன்னேற்றமடைந்துள்ளது. இதுகுறித்து அரசின் புள்ளிவிவரங்கள் கூறுவதாவது: நிலக்கரி, கச்சா எண்ணெய், ... மேலும் பார்க்க

நிலக்கரி போக்குவரத்து 2024ஆம் நிதியாண்டில் இரட்டிப்பு!

புதுதில்லி: ரயில்-கடல்-ரயில் பாதை வழியாக கொண்டு சென்ற நிலக்கரி போக்குவரத்து 2024ஆம் நிதியாண்டில் இரட்டிப்பாகி 54 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது.பல்வேறு மின் உற்பத்தி நிலை... மேலும் பார்க்க

அந்நிய செலாவணி கையிருப்பு $640.479 ஆக உயர்வு!

மும்பை: பிப்ரவரி 21ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 4.758 பில்லியன் டாலர் அதிகரித்து 640.479 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்துள்... மேலும் பார்க்க