செய்திகள் :

சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக் கொண்டாட்டத்தில் வன்முறை: கைதானவர்களுக்கு மொட்டையடித்த காவல்துறை!

post image

சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக் கொண்டாட்டத்தில் வன்முறை வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

8 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. இதனால், நாடு முழுவதிலும் உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் பட்டாசு வெடித்து வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தக் கொண்டாட்டம் ஒரு படி மேலே சென்று மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் தேவாஸ் மாவட்டத்தில் வன்முறையாக மாறியது. கடந்த மார்ச் 9 ஆம் தேதி அம்பேத்கர் நகர் - மோவ் நகரில் இரு தரப்பினருக்கும் இடையே வன்முறை வெடித்தது. இந்த மோதலில் 4 பேர் காயமடைந்தனர். சிலருக்கு எலும்புமுறிவு ஏற்பட்ட நிலையில், காவல் துறையினரும் காயமடைந்தனர்.

இரவு 10.45 மணியளவில் ஜாமா மசூதி அருகே பட்டாசுகளை வெடித்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிலர் இரவு நேர தொழுகை செய்து கொண்டிருந்தனர்.

இதையும் படிக்க: ரிஷப் பந்த் வீட்டுல விசேஷம்..! நடனமாடிய தல தோனி, சின்ன தல ரெய்னா!

அந்தக் கும்பல் கற்களை வீசியது மட்டுமல்லாமல், அந்தப் பகுதியிலிருந்த பல வாகனங்களுக்கும் தீவைத்தனர். அதைத் தொடர்ந்து, ஜாமா மசூதி பகுதியை ஒட்டிய பட்டி பஜார், மார்க்கெட் சௌக், மனக் சௌக், சப்ஜி மார்க்கெட், கஃபர் ஹோட்டல் மற்றும் கன்னாட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்த வாகங்களையும் கல் வீசி தாக்குதல் நடத்தினர்.

சாயாஜி கேட் அருகே காவல் நிலைய பொறுப்பாளர் அஜய் சிங் குர்ஜார் தலைமையிலான காவல்துறையினர், சில இளைஞர்கள் ஆபத்தான முறையில் பட்டாசுகளை வெடிப்பதைத் தடுக்க முயன்றபோது வன்முறை ஏற்பட்டது.

இளைஞர்கள் அதிகாரிகளிடம் தவறாக நடந்து கொள்வதையும், சிலர் காவல்துறை வாகனத்தைத் துரத்திச் சென்று அதன் மீது கற்களை வீசுவதையும் கண்காணிப்பு கேமராக் காட்சிகள் வெளிப்படுத்தியுள்ளன.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் 10 இளைஞர்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மறுநாள் மாலை, அவர்களில் சிலர் காவல் நிலையத்திலிருந்து சாயாஜி கேட் வரை வலுக்கட்டாயமாக தலையை மொட்டையடித்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

கிரிக்கெட்டில் கொண்டாட்டத்தில் தொடங்கி வன்முறையில் முடிந்த சம்பவத்தில் இளைஞர்கள் மொட்டையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிக்க: ஐபிஎல்: சென்னை - மும்பை போட்டிக்கான டிக்கெட் ரூ. 1.23 லட்சம்!

மராத்தியில் பேசுமாறு பஞ்சாயத்து அலுவலரைத் திட்டிய நபர் கைது!

கர்நாடக அரசு ஊழியரை மராத்தியில் பேசுமாறு தகாத வார்த்தைகளால் திட்டிய நபரைக் காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடகத்தின் பெலகாவி மாவட்டத்தில் திப்பன்னா சுபாஷ் டோக்ரே என்பவர் சொத்து தொடர்பான பிரச்சினைக்க... மேலும் பார்க்க

ஜக்கி வாசுதேவ் மீதான அவதூறு விடியோவை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஜக்கி வாசுதேவ் மற்றும் அவரது ஈஷா அறக்கட்டளை மீது அவதூறு பரப்பும் விதமாக பத்திரிகையாளர் வெளியிட்ட விடியோவை நீக்க தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பத்திரிகையாளரும் யூடியுபருமான ஷ்யாம் மீரா சிங் த... மேலும் பார்க்க

நாட்டின் சில்லறை பணவீக்கம் 3.61% ஆக சரிவு!

நாட்டின் சில்லறை பணவீக்கம் 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்து பிப்ரவரியில் 3.61 சதவீதமாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 4 சதவீதத்துக்கும் கீழாக சரிந்துள்ளது இதுவே முதல்முறையாகும். மேலும் பார்க்க

ஹோலி பண்டிகை: தார்பாயால் மசூதிகளை மூட காவல்துறை உத்தரவு!

உத்தரப் பிரதேசத்தின் சம்பலில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு 10 மசூதிகளை தார்பாயால் மூட காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரிதாக நடைபெறும் நிகழ்வாக ஹிந்துக்கள் கொண்டாடும் ஹோலி பண்டி... மேலும் பார்க்க

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு: யோகி ஆதித்யநாத்

ஹோலி, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பிரதமரின் உஜ்வாலா யோஜனாவின் கீழுள்ள பயனாளிகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார். லக்னௌவில் நடந்த மானி... மேலும் பார்க்க

தில்லி ஆளுநருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறும் புதிய பாஜக அரசு?

தில்லி ஆளுநர் வி.கே. சக்சேனாவுக்கு எதிரான வழக்குகளை தில்லியின் புதிய பாஜக அரசு வாபஸ் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தில்லியில் 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்தபோ... மேலும் பார்க்க