செய்திகள் :

சார்லி கிர்க்கை கொன்ற ராபின்சன் தன்பாலின ஈர்ப்பாளரா? யார் அந்த அறை நண்பர்?

post image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க்கை (31 வயது), ராபின்சன் என்ற 22 வயது இளைஞர் கொன்றதாக புலனாய்வுப் பிரிவு அவரைக் கடந்த வெள்ளிக் கிழமை கைது செய்தது.

ராபின்சனின் அறை நண்பரான (ரூம் மேட்) லான்ஸ் ட்விக்ஸ் என்பவருக்கு அனுப்பிய குறுஞ்செய்திகள் மூலமாத்தான் அவர் பிடிப்பட்டது கவனிக்கத்தக்கது.

ராபின்சன் ரூம் மேட்யார்?

அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளருமான சார்லி கிர்க், யூட்டா பல்கலைக்கழகத்தில் செப்.10 ஆம் தேதி நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தபோதே சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் டைலர் ராபின்சன் என்ற 22 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராபின்சன் அறை நண்பரும் கேம் விளையாடுவதில் வல்லவராக இருக்கும் லான்ஸ் ட்விக்ஸ் (22 வயது) இந்த வழக்கில் முக்கியமானவராக கருதப்படுகிறார்.

ராபின்சன் அறைநண்பர்களில் ஒருவர் திருநங்கையாக மாறிவருவதாகவும் அவருடன் ராபின்சன் வாழ்ந்துவருவதாகவும் நியூயார்க் போஸ்ட் என்ற நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

தன்பாலின ஈர்ப்பாளர் செய்த கொலையா?

அந்த நபர் யார் என்ற அடையாளத்தை வெளியிடவில்லை. ஃபாக்ஸ் செய்தி நிறுவனமும் இதை உறுதிப்படுத்தியுள்ளது.

ராபின்சன் குறுஞ்செய்தி அனுப்பியவர் லான்ஸ் ட்விக்ஸ்தான் அந்த நபரா என்ற கோணத்தில் விசாரணையில் மேற்கொள்ளப்படவிருக்கிறது.

கொலைச்செய்யப்பட்ட சார்லி கிர்க் பெண்கள் மட்டுமின்றி தன்பாலின ஈர்ப்பாளர்கள் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

பாலியல், பாலினம் ரீதியிலான முற்போக்கு என்பது ’பாலியல் அராஜகம்’ என்று சார்லி கிர்க் கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Last Friday, investigators arrested a 22-year-old man named Robinson for the murder of Charlie Kirk (31), an ardent supporter of US President Donald Trump.

நேபாள வன்முறையில் பலியானவர்கள் தியாகிகளாக அறிவிப்பு!

நேபாளத்தில் வன்முறையின்போது, பலியானோரின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் நேபாள ரூபாய் நிதியுதவியாக வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.நேபாளத்தில் ஊழல் மற்றும் சமூக வலைதளங்கள் மீதான தடைக்கு ... மேலும் பார்க்க

சார்லி கிர்க்கின் கொலையை முன்பே கணித்த பாதுகாவலர்! முன்னெச்சரிக்கை உதாசீனம்!

அமெரிக்காவில் திருப்புமுனை அமைப்பின் நிறுவனர் சார்லி கிர்க்கின் கொலை அச்சுறுத்தல் குறித்து முன்னரே எச்சரிக்கை விடுத்ததாக பாதுகாப்பு நிபுணர் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அதிபர் டொ... மேலும் பார்க்க

சண்டை அல்லது மரணம்! பிரிட்டனில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக 1.5 லட்சம் பேர் போராட்டம்!

பிரிட்டனில் புலம்பெயர்வுக்கு எதிராக ஒன்றரை லட்சம் பேர் சேர்ந்து மாபெரும் பேரணி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.லண்டனில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக அந்நாட்டினர் மாபெரும் போராட்டத்தை சனிக்கிழமையில... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: மோதலில் 12 வீரா்கள், 35 பயங்கரவாதிகள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் வடமேற்கு கைபா் பக்துன்க்வா மாகாணத்தில் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 12 ராணுவ வீரா்களும், தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-எ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்பைச் சோ்ந்த 35 பயங்கரவாதிகளும் கொ... மேலும் பார்க்க

இளைஞா்கள் போராட்டத்தில் நீதித்துறை ஆவணங்கள் சேதம்: நேபாள உச்சநீதிமன்றம்!

இளைஞா்கள் போராட்டத்தில் நீதித் துறை சாா்ந்த முக்கிய வரலாற்று ஆவணங்கள் பெரும்பாலானவை சேதமடைந்ததாக நேபாள உச்சநீதிமன்றம் தெரிவித்தது. நேபாளத்தில் ஊழல் மற்றும் சமூக வலைதள தடைக்கு எதிராக இளைஞா்கள் நடத்திய ... மேலும் பார்க்க

ஹமாஸுடனான போரில் சட்ட திட்டங்களைப் பின்பற்றவில்லை! இஸ்ரேல் முப்படை தளபதி

ஹமாஸுடனான போரில் தங்களது படையினா் சா்வதேச சட்டதிட்டங்களைப் பின்பற்றவில்லை என்று, 17 மாதங்களாக அந்தப் போரை நடத்திய இஸ்ரேல் முப்படை தளபதி ஹொ்ஸி ஹலேவி ஒப்புக்கொண்டுள்ளாா். மேலும், காஸாவில் இஸ்ரேல் நடத்த... மேலும் பார்க்க