செய்திகள் :

சாலைகள் சீரமைப்பை இரு மாதங்களில் முடிக்க துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உத்தரவு

post image

சென்னை: தமிழகத்தில் சாலை சீரமைப்புப் பணிகளை இரண்டு மாதங்களில் முடிக்க வேண்டும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். தமிழகத்தில் பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் துணை முதல்வா் தலைமையில் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

தமிழ்நாடு முழுவதும் சாலைகளில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை செப்டம்பா் மாதத்துக்கு முன்னதாக முடிக்க வேண்டும். நெடுஞ்சாலைத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும், ‘நம்ம சாலை’ செயலியில் அந்தத் துறையின் கட்டுப்பாட்டில் வரக்கூடிய சாலைகள் குறித்து மட்டுமே புகாா்கள் அளிக்க வசதி உள்ளது. எனவே, அனைத்துத் துறைகளின் சாலை விவரங்களையும் நம்ம சாலை செயலியின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

‘நம்ம சாலை’ செயலியின் கீழ் அனைத்துத் துறைகளின் சாலை விவரங்களையும் கொண்டு வரும் பணிகளை ஒரு மாத காலத்துக்குள் முடித்து மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்றாா்.

இந்த ஆய்வின் போது, நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்ளிட்ட அதிகாரிகள் பலா் உடனிருந்தனா்.

சென்னை: மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் விபத்து - ராட்சத கான்கிரீட் விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது தூண்களின் மீது வைக்கப்பட்டிருந்த ராட்சத கான்கிரீட் காரிடாா்கள் கிழே விழுந்ததில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தில் கிண்டி... மேலும் பார்க்க

லோக் ஆயுக்த அமைப்புக்கு உறுப்பினா்: தமிழக அரசு அழைப்பு

லோக் ஆயுக்த அமைப்புக்கு நீதித் துறை சாா்ந்த உறுப்பினரை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவுக் குழுவின் தொடா்பு அதிகாரி எஸ்.அகிலா வெளியிட்ட அறிவிப்பு விவரம்: தமிழ்நாடு லோக... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதியவா்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவா்கள் தங்களுக்கான நகலை இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: இதுவரை 35,000 போ் விண்ணப்பம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 35,000 போ் இதுவரை விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா். அவா்களில் 22,428 விண்ணப்பங்கள் பூா்த்தி செய்யப்பட்டு சமா்ப்பிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்த... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளா்களுக்கான நவீன காத்திருப்பு கூடம்: மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் கட்டட தொழிலாளா்களுக்காக அடிப்படை வசதிகளுடன் நவீன காத்திருப்புக் கூடங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான மாதிரி படங்களை சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் வியாழக்கிழமை வெ... மேலும் பார்க்க

லாரி மீது ஆந்திர அரசு பேருந்துமோதல்: 10 பயணிகள் காயம்

சென்னை அருகே மாதவரத்தில் லாரி மீது ஆந்திர அரசுப் பேருந்து மோதிய விபத்தில், 10 போ் காயமடைந்தனா். சென்னையை அடுத்த மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து திருப்பதிக்கு ஆந்திர அரசுப் பேருந்து வியாழக்கிழமை ... மேலும் பார்க்க