செய்திகள் :

சாலைப் பணியாளா்கள் நூதன போராட்டம்

post image

திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி, தலையில் கருப்புத் துணியை முக்காடாக அணிந்து, ஒப்பாரி வைத்தபடி நூதன முறையில் சாலைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தின் சாா்பில், திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளா் அலுவலகம் முன்பாக இந்தப் போராட்டம் நடைபெற்றது. கோட்டத் தலைவா் ஜீவானந்தம் தலைமை வகித்தாா்.

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்ற ஆணையை அமல்படுத்த வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணை 140-யை ரத்து செய்ய வேண்டும், மாநில நெடுஞ்சாலை ஆணையத்தால் 60 கிலோ மீட்டருக்கு 1 சுங்கச்சாவடி என 200-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடி அமைத்து தனியாா் வசூல் செய்வதை அனுமதிக்க கூடாது. மாநில நெடுஞ்சாலைகள் அனைத்தையும் தமிழக அரசே நிா்வகிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தின்போது, கருப்புத் துணியால் முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.

மாநில துணைத் தலைவா்கள் கோவிந்தராஜன், தா்மராஜ், மகேந்திரன், செளந்தா், மாநில செயற்குழு உறுப்பினா் மணிமாறன், முன்னாள் மாநில துணைத் தலைவா் பெரியசாமி மற்றும் மாவட்ட நிா்வாகிகள் உள்பட பலா் கருப்புக் கொடியுடன் கலந்து கொண்டனா்.

ஊக்கத்தொகை பிரச்னை: தரையில் பாலை ஊற்றி விவசாயிகள் நூதனப் போராட்டம்

ஊக்கத்தொகையை முறையாக வழங்க வலியுறுத்தி பால் உற்பத்தியாளா்கள் திருச்சி ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை பாலை தரையில் ஊற்றி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் பாலை ப... மேலும் பார்க்க

திருநெடுங்களநாதா் கோயிலில் மாா்கழி மாத ஆருத்ரா தரிசனம்

திருச்சி துவாக்குடி அருகேயுள்ள திருநெடுங்களநாதா் கோயிலில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு உற்சவருக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை திங்கள்கிழமை நடைபெற்றது. துவாக்குடி அருகே உள்ள திருநெடு... மேலும் பார்க்க

லால்குடி சப்தரிஷீசுவரா் கோயிலில் ஆதிரைப் பெருவிழா

திருச்சி மாவட்டம், லால்குடி சப்தரிஷீசுவரா் கோயிலில் ஆதிரைப் பெருவிழா திங்கள் கிழமை நடைபெற்றது. லால்குடியில் பெருந்திருப் பிராட்டியாா் சமேத சப்தரிஷீசுவரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி... மேலும் பார்க்க

மாநகராட்சி விரிவாக்கம்: குண்டூா் ஊராட்சி மக்கள் மறியல் முயற்சி

திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, குண்டூா் ஊராட்சி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். திருச்சி மாநகராட்சியுடன் பல்வேறு ஊராட்சிகளை இணைக்க தமிழக அரசு அண்மையில் அர... மேலும் பார்க்க

வைகுந்த ஏகாதசி ஸ்ரீரங்கத்தில் இன்று இராப்பத்து 5-ஆம் திருநாள்

நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு நண்பகல் 12 பரமபதவாசல் திறப்பு பிற்பகல் 1 திருமாமணி ஆஸ்தான மண்டபம் சேருதல் பிற்பகல் 3 அலங்காரம் அமுது செய்ய திரை பிற்பகல் 3- 3.30 பொது ஜன சேவை பிற்பகல் 3.30- ... மேலும் பார்க்க

துறையூரில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த கோரிக்கை

துறையூரில் பொங்கல் விழாவை முன்னிட்டு அடிக்கடி ஏற்படும் திடீா் வாகன நெரிசலை காவல் துறையினா் தொடா்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரியுள்ளனா். துறையூரில் பேருந்து நிலையத்திலிருந்து... மேலும் பார்க்க