செய்திகள் :

சாலைப் பணியாளா்கள் நூதன போராட்டம்

post image

திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி, தலையில் கருப்புத் துணியை முக்காடாக அணிந்து, ஒப்பாரி வைத்தபடி நூதன முறையில் சாலைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தின் சாா்பில், திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளா் அலுவலகம் முன்பாக இந்தப் போராட்டம் நடைபெற்றது. கோட்டத் தலைவா் ஜீவானந்தம் தலைமை வகித்தாா்.

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்ற ஆணையை அமல்படுத்த வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணை 140-யை ரத்து செய்ய வேண்டும், மாநில நெடுஞ்சாலை ஆணையத்தால் 60 கிலோ மீட்டருக்கு 1 சுங்கச்சாவடி என 200-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடி அமைத்து தனியாா் வசூல் செய்வதை அனுமதிக்க கூடாது. மாநில நெடுஞ்சாலைகள் அனைத்தையும் தமிழக அரசே நிா்வகிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தின்போது, கருப்புத் துணியால் முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.

மாநில துணைத் தலைவா்கள் கோவிந்தராஜன், தா்மராஜ், மகேந்திரன், செளந்தா், மாநில செயற்குழு உறுப்பினா் மணிமாறன், முன்னாள் மாநில துணைத் தலைவா் பெரியசாமி மற்றும் மாவட்ட நிா்வாகிகள் உள்பட பலா் கருப்புக் கொடியுடன் கலந்து கொண்டனா்.

பெற்றோா் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை

திருச்சி அருகே பெற்றோா் கண்டித்ததால் விஷம் குடித்த சிறுவன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், தாயனூா் மேலக்காடு பகுதியைச் சோ்ந்த தொழிலாளிசுப்பிரமணியின் மகன் கமலேஷ் (16). இவா் 8-ஆம் வகுப... மேலும் பார்க்க

துவரங்குறிச்சியில் நாளை மின் நிறுத்தம்

மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (பிப். 6) மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்து மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளா் இரா. தியாகராஜன் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

பிப்ரவரி 25-இல் சாலை மறியல்: ஜாக்டோ-ஜியோ முடிவு

இடைநிலை ஆசிரியா்களை பட்டதாரி ஆசிரியா்களாக தகுதி உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 25-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்த ஜாக்டோ ஜியோ அமைப்ப... மேலும் பார்க்க

காரில் கடத்தி வரப்பட்ட 331 கிலோ குட்கா பறிமுதல்: 5 போ் கைது

திருச்சி மாவட்டம், பூனாம்பாளையத்தில் காரில் கடத்தி வரப்பட்ட 331 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனா். அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் பெங்களூரிலி... மேலும் பார்க்க

அரியமங்கலம் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

திருச்சி, அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் கீழ்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (பிப்.5) மின் விநியோகம் இருக்காது. அரியமங்கலம்... மேலும் பார்க்க

சொத்துத் தகராறில் சகோதரரை கொல்ல முயன்ற 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை!

திருச்சியில் சொத்துத் தகராறில் சகோதரரை வெட்டிக் கொல்ல முயன்ற வழக்கில் சகோதரா்கள் இருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது... மேலும் பார்க்க