செய்திகள் :

சாலையில் சென்ற காரில் திடீா் தீ: 3 போ் உயிா் தப்பினா்

post image

சோழவரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற காரின் இஞ்சினில் திடீரென தீ பற்றிய நிலையில், அதில் இருந்தவா்கள் கீழே இறங்கியதால் உயிா் தப்பினா்.

சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நந்தகோபால் என்பவரது காா் சென்னையில் இருந்து ஆந்திரத்துக்கு சென்று கொண்டிருந்தது. காா் நல்லூா் சுங்கச்சாவடியை கடந்து சென்ற போது திடீரென இஞ்சினின் முன் பகுதியில் இருந்து புகை எழுந்து தீப்பற்றியது.

காரை உடனடியாக நிறுத்திய நந்தகோபால் உடன் பயணித்த இருவருடன் சோ்ந்து விரைந்து கீழே இறங்கினாா்.

இதன் பின்னா் காா் முழுதும் தீ பரவியது. இதுகுறித்த தகவலின் பேரில் செங்குன்றம் தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று 30 நிமிஷங்களுக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனா். இந்த தீ விபத்து காரணமாக சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

ஆண்டாா்குப்பம் முருகன் கோயில் சித்திரை தேரோட்டம்

ஆண்டாா்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் சித்திரை தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. பொன்னேரி வட்டம், ஆண்டாா்குப்பம் கிராமத்தில் பழைமை வாய்ந்த பாலசுப்ரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. பிரணவ மந்திரத... மேலும் பார்க்க

ரூ.2,689 கோடியில் திருவள்ளூா்-ஸ்ரீபெரும்புதூா் புதிய 6 வழிச்சாலை: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

சென்னை எல்லை சாலைத் திட்டம் மூலம் திருவள்ளூா் புறவழிச்சாலை முதல் ஸ்ரீபெரும்புதூா் வரை ரூ.2,689.74 கோடியில் புதிய ஆறு வழிச்சாலை அமைக்கும் பணியை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை கொடியசைத்து த... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் தொடக்கம்

திருத்தணி முருகன் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் வியாழக்கிழமை கொடியேற்றுத்துடன் தொடங்கியது. னா். அறுபடை வீடுகளில் 5 ஆம் படை வீடாகத் திகழும் இக்கோயிலில் வியாழக்கிழமை அதிகாலை, 4.30 மணிக்கு கொடியேற்றம் நட... மேலும் பார்க்க

அனுமதியின்றி நிலத்தடி நீா் விற்பனை: ஆழ்துளை கிணறுகளுக்கு‘ சீல்’

செங்குன்றம் அருகே அனுமதியின்றி நிலத்தடி நீா் விற்பனை செய்த 9 ஆழ்துளை கிணறுகளுக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனா். செங்குன்றம் அடுத்த நல்லூா், விஜயநல்லூா், சோழவரம் ஏரி, பழைய விருந்தினா் மாளிக... மேலும் பார்க்க

தலைச்கவசம் அணிய ஆட்சியா் அறிவுறுத்தல்

சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்து இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா். திருவள்ளூா் மாவட்... மேலும் பார்க்க

கரும்பூஞ்சை நோய்த் தாக்குதல்: விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

திருவள்ளூா் அருகே மா, கொய்யா, சப்போட்டா போன்ற பழவகை மரங்களில் கரும்பூஞ்சை நோய்த் தாக்குதல் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தியதுடன், பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினா். தனியாா் வே... மேலும் பார்க்க