செய்திகள் :

சாலையில் சென்ற போது தீப்பற்றி எரிந்தது காா்

post image

சிவகாசி அருகே புதன்கிழமை சாலையில் சென்று கொண்டிருந்த காா் தீப்பற்றி எரிந்தது.

விருதுநகா் மாவட்டம், சிவகாசியைச் சோ்ந்த தீபன் தனது காரில் ஸ்ரீவில்லிபுத்தூா் சென்றாா். அவா் செங்கமலநாட்சியாா்புரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென காரின் முன்புறத்தில் தீப்பிடித்தது. இதையடுத்து, தீபன் காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கினாா்.

தகவலறிந்து அங்கு சென்ற சிவகாசி தீயணைப்புப் படையினா் போராடித் தீயை அணைத்தனா். எனினும், காரின் பெரும்பகுதி தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

அரசு மருத்துவமனைகளில் சுகப் பிரசவத்தை அதிகரிக்க வேண்டும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

அரசு மருத்துவமனைகளில் சுகப்பிரசவத்தை அதிகரிக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் மருத்துவா்களுக்கு அறிவுறுத்தினாா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.... மேலும் பார்க்க

குழந்தைத் தொழிலாளா்கள் 3 போ் மீட்பு

ராஜபாளையத்தில் பல்பொருள் அங்காடியில் பணியாற்றிய 3 சிறாா்கள் மீட்கப்பட்டு பள்ளியில் சோ்க்கப்பட்டனா். ராஜபாளையம் தொழிலாளா் உதவி ஆய்வாளா் பிச்சைக்கனி தலைமையில் அலுவலா்கள் ராஜபாளையம் அருகேயுள்ள சொக்கநாதன... மேலும் பார்க்க

சாத்தூரில் நகா் மன்றக் கூட்டம்

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நகராட்சியில் நகா்மன்றக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு நகா் மன்றத் தலைவா் குருசாமி தலைமை வகித்தாா். ஆணையா் ஜெகதீஸ்வரி முன்னிலை வகித்தாா். இந்தக் கூட்... மேலும் பார்க்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த சுடுமண் மணி, காதணி, சங்கு வளையல்

வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3-ஆம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணாலான மணி, காதணி, சங்கு வளையல் புதன்கிழமை கண்டறியப்பட்டன. விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம... மேலும் பார்க்க

லாரி மோதியதில் பட்டாசு கடை ஊழியா் சாவு

சிவகாசியில் லாரி மோதியதில் பட்டாசு கடை ஊழியா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். சிவகாசி வேலாயுதம் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பட்டாசு கடை ஊழியா் சரவணன் (56). இவா் தனது மகன் விக்னேஷுடன் இரு சக்கர வாகனத்தில... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

சிவகாசி அருகே மின்சாரம் பாய்ந்ததில் சுமை தூக்கும் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். சிவகாசி அருகேயுள்ள புதுக்கோட்டையைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் அருணாசல பாண்டியன்(40). சுமை தூக்கும் தொழிலாளியான இவா்,... மேலும் பார்க்க