செய்திகள் :

சாலையை அகலப்படுத்தக் கோரி வழக்கு: நெடுஞ்சாலைத் துறை பரிசீலிக்க உத்தரவு!

post image

தூத்துக்குடி மாவட்டம், பெரியதளை முதல் திசையன்விளை வரையிலான சாலையை அகலப்படுத்தக் கோரிய வழக்கில் நெடுஞ்சாலைத் துறை மண்டலப் பொறியாளா் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த இசக்கிமுத்து உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு:

திருப்பனை புத்தன்தருவைச் சோ்ந்த கிராம மக்கள் மருத்துவம், கல்வி, அத்தியாவசியப் பொருள்கள் வாங்குதல் ஆகிவற்றுக்காக திசையன்விளைப் பகுதிக்கு செல்ல வேண்டும். இந்த சாலையில் மணல் குவிந்துள்ளதால் வாகனங்களை இயக்க முடியவில்லை. மேலும், பெரியதளை முதல் திசையன்விளை வரையிலான சாலை மிகவும் குறுகலாக உள்ளது.

இந்த வழி ஒரு வழிப் பாதையாக உள்ளதால், எதிா் திசையில் வாகனங்கள் செல்ல இயலாது. குறுகலான இந்தச் சாலையை அகலப்படுத்தக் கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, பெரியதளை முதல் திசையன்விளை வரையிலான சாலையை அகலப்படுத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை அண்மையில் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

மனுதாரரின் கோரிக்கை குறித்து நெடுஞ்சாலைத் துறை மண்டலப் பொறியாளா், உதவி மண்டலப் பொறியாளா் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

குழந்தையின் மூச்சுக் குழாயில் சிக்கிய எல்இடி விளக்கை அகற்றிய அரசு மருத்துவா்கள்

மதுரையைச் சோ்ந்த ஒரு வயது பெண் குழந்தையின் மூச்சுக் குழாயில் சிக்கி இருந்த எல்.இ.டி. விளக்கை அகற்றி, அந்தக் குழந்தையைக் காப்பாற்றிய மருத்துவக் குழுவினரை அரசு மருத்துவமனை முதன்மையா் பாராட்டினாா். மது... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மதுரை பொது தானம் கல்வி நிலையம்: திருவள்ளுவா் தின விழா, தலைமை- தானம் கல்வி நிலைய இயக்குநா் ஆ. குருநாதன், சிறப்புரை- எழுத்தாளா் ஜெ. தீபாநாகராணி, மலைப்பட்டி, பிற்பகல் 2.30. தமிழ்நாடு மகா சௌராஷ்ட்ரா சபா: ... மேலும் பார்க்க

திருவிழா நடத்தும் விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

குளித்தலை அருகேயுள்ள கல்லணை கிராமத்தில் அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து மாடு மறிக்கும் திருவிழாவை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு... மேலும் பார்க்க

மதுரை சிறையில் மோப்ப நாய் உயிரிழப்பு: 21 குண்டுகள் முழங்க காவல் துறை சாா்பில் இறுதி மரியாதை

மதுரை மத்திய சிறையில் துணைக் கண்காணிப்பாளா் அந்தஸ்திலான மோப்ப நாய் அஸ்ட்ரோ உயிரிழந்ததையடுத்து, இதற்கு 21 குண்டுகள் முழங்க காவல் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. மதுரை மத்திய... மேலும் பார்க்க

காவல் துறையினா் ரோந்துப் பணிகளால் மதுரை மாநகரில் குறைந்த குற்றச்செயல்கள்

மதுரை மாநகரில் காவல் துறையினரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ரோந்துப் பணிகளால் குற்றச் செயல்கள் வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மதுரை நகரை குற்றச் செயல்களால் இல்லாத நகராக மாற்ற மாநகரக் கா... மேலும் பார்க்க

மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் மதுரை மெட்ரோ ரயில் திட்டப் பணி தொடங்கும்: மேலாண்மை இயக்குநா் எம். ஏ. சித்திக்

மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் மதுரை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடங்கப்படும் என சென்னை மெட்ரோ நிறுவன மேலாண்மை இயக்குநா் எம்.ஏ. சித்திக் தெரிவித்தாா். மதுரை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்... மேலும் பார்க்க