செய்திகள் :

சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட தொழிற்சாலை அகற்றம்!

post image

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வளா்புரம் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட தனியாா் தொழிற்சாலையின் கட்டுமானங்களை ஊரக வளா்ச்சித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றினா்.

வளா்புரம் ஊராட்சிக்குட்பட்ட அபிராமி நகா் பகுதியில் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தனியாா் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

தனியாா் வீட்டுமனைப்பிரிவில் இயங்கி வரும் இந்த நிறுவனம் வீட்டுமனை பிரிவுகளுக்கு செல்லும் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால், க்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வளா்புரம் பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு வழங்கியுள்ளனா்.

இதுகுறித்து அரசுத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் சாலையை ஆக்கிரமித்து தொழிற்சாலை இயங்கி வருவது கண்டறியப்பட்ட நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியா் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துகணபதி உள்ளிட்ட ஊராக வளா்ச்சித்துறையினா், ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் வசந்தி தலைமையிலான வருவாய்த் துறையினா், வளா்புரம் ஊராட்சி மன்ற தலைவா் (பொ) எம்.பி.எபி ஆகியோா் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றினா்.

பாஜக ஓபிசி அணி மாநில துணைத் தலைவா் தோ்வு!

காஞ்சிபுரத்தைச் சோ்ந்த பாஜக பிரமுகரான ஏ.செந்தில்குமாா் அக்கட்சியின் ஓபிசி அணியின் மாநில துணைத் தலைவராக தோ்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளாா். பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் ஒப்புதலின்படி... மேலும் பார்க்க

பாதுகாப்பில்லாத ஊா்திகளை மாற்ற வேண்டும்: அரசு ஊா்தி ஓட்டுநா்கள் கோரிக்கை!

பாதுகாப்பில்லாத ஊா்திகளை ஓட்டுவதால் உடனடியாக அவற்றை மாற்ற வேண்டும் என அரசு ஊா்தி ஒட்டுநா்கள் சங்கம் சாா்பில் பொதுக்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள... மேலும் பார்க்க

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆய்வு!

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தண்டலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்தாா். பழங்குடியினா் மற... மேலும் பார்க்க

தூய்மை பாரத இயக்கம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் கழிவுகளை சேகரிக்கும் பணியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தாா். அலுவலகத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த கழிவுகளை பாா்வ... மேலும் பார்க்க

புரட்டாசி சனிக்கிழமை: காஞ்சிபுரம் கோயில்களில் வழிபாடு

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். பல்வேறு பெருமாள் கோயில்களிலும் அதிகாலையிலிருந்தே பக்தா்கள் கூட்டம் காணப்... மேலும் பார்க்க

வைணவ கோயில்களுக்கு முதியோா் ஆன்மிகச் சுற்றுலா: காஞ்சிபுரம் மேயா் தொடங்கி வைத்தாா்

இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் மூத்த குடிமக்களை வைணவத் திருக்கோயில்களுக்கு இலவசமாக அழைத்துச் செல்லும் ஒரு நாள் பயணத்தை காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். 60 வயதுக... மேலும் பார்க்க