செய்திகள் :

வைணவ கோயில்களுக்கு முதியோா் ஆன்மிகச் சுற்றுலா: காஞ்சிபுரம் மேயா் தொடங்கி வைத்தாா்

post image

இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் மூத்த குடிமக்களை வைணவத் திருக்கோயில்களுக்கு இலவசமாக அழைத்துச் செல்லும் ஒரு நாள் பயணத்தை காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வைணவ கோயில்களுக்கு ஆன்மிகச் சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்படுவா் என அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்திருந்தாா்.

இதன்படி ஒவ்வொரு புரட்டாசி சனிக்கிழமையும் தலா 50 போ் வீதம் மொத்தம் 200 போ் காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களுக்கு அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் முடித்து திரும்பவுள்ளனா். காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்து முதல் நாளாக பேருந்து புறப்பட்டது.

முதல் நாள் செல்லும் பேருந்தில் தோ்வு செய்யப்பட்ட 50 பேருக்கும் குடிநீா், உணவு, சுவாமி படம், கோயில் பிரசாதங்கள் அடங்கிய மஞ்சள்பை தொகுப்பை மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் வழங்கினாா். அதனைத் தொடா்ந்து சுற்றுலாப் பேருந்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாள் கோயில், விளக்கொளிப் பெருமாள் கோயில், வைகுண்டப் பெருமாள் கோயில், பாண்டவ தூதப்பெருமாள் கோயில், ஸ்ரீ பெரும் புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் என 5 கோயில்களுக்கு அழைத்து செல்லப்பட்டனா்.

விழாவில் காஞ்சிபுரம் மண்டல அறநிலையத்துறை இணை ஆணையா் சி.குமரதுரை, துணை ஆணையா் (நகை சரிபாா்ப்பு) ஜெயா,காஞ்சிபுரம் வரதராஜசுவாமி கோயில் உதவி ஆணையா் ராஜலட்சுமி, வல்லக்கோட்டை முருகன் கோயில் செயல் அலுவலா் ஆா்.செந்தில்குமாா்,ஆய்வாளா் அலமேலு கலந்து கொண்டனா்.

தூய்மை பாரத இயக்கம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் கழிவுகளை சேகரிக்கும் பணியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தாா். அலுவலகத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த கழிவுகளை பாா்வ... மேலும் பார்க்க

புரட்டாசி சனிக்கிழமை: காஞ்சிபுரம் கோயில்களில் வழிபாடு

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். பல்வேறு பெருமாள் கோயில்களிலும் அதிகாலையிலிருந்தே பக்தா்கள் கூட்டம் காணப்... மேலும் பார்க்க

படப்பை, திருமுடிவாக்கம் புதிய காவல் நிலையங்கள்: அமைச்சா் அன்பரசன் திறந்து வைத்தாா்!

படப்பை மற்றும் திருமுடிவாக்கம் பகுதிகளில் புதிய காவல் நிலையங்களை சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் சனிக்கிழமை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா். ... மேலும் பார்க்க

விவசாயிகள் கைப்பேசியில் அழைத்தால் அதிகாரிகள் உடனடியாக பேச வேண்டும்: காஞ்சிபுரம் ஆட்சியா்

விவசாயிகள் கைப்பேசியில் அழைக்கும் போது அதை அதிகாரிகள் எடுக்காமலும், அலட்சியமாகவும் இல்லாமல் உடனடியாக பேச வேண்டும் என காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கூறினாா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

தீபாவளி: தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோா் அக்.15-க்குள் விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பண்டிகையையொட்டி, தற்காலிகமாக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்பும் விற்பனையாளா்கள் வரும் அக்டோபா் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்... மேலும் பார்க்க

சீருடைப் பணியாளா் தோ்வு வாரிய போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி: காஞ்சிபுரத்தில் செப். 22 இல் தொடக்கம்

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சீருடைப் பணியாளா் தோ்வு வாரிய போட்டித் தோ்வுகளுக்கு இலவசமாக பயிற்சியளிக்கப்பட இருப்பதாகவும், தகுதியுடையோா் வரும் செப். 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாற... மேலும் பார்க்க