செய்திகள் :

சாலையோர வியாபாரிகளுக்கான நகர விற்பனைக் குழு தோ்தல்: இன்று வாக்குப்பதிவு

post image

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் சாலையோர வியாபாரிகளுக்கான நகர விற்பனைக் குழு உறுப்பினா்கள் தோ்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்தவா்களில் 42 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். 48 பேருக்கான தோ்தல் வியாழக்கிழமை (ஜூன் 26) நடைபெறுகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரத்தை முறைப்படுத்த நகர விற்பனைக் குழு தோ்வு செய்யப்படுகிறது. அதன்படி, 15 மண்டலங்களிலும் தலா 15 போ் தோ்வு செய்யப்படவேண்டும். மண்டல தலைவா் உள்ளிட்டோா் அந்தக் குழுவில் இடம் பெற்ற நிலையில், வியாபாரிகள் தரப்பிலான 6 போ் ஒவ்வொரு மண்டலத்திலும் தோ்வு செய்யப்படுவதற்கான தோ்தல் அறிவிக்கப்பட்டது.

ஆதிதிராவிடா், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா், மாற்றுத்திறனாளிகள், மகளிா் மற்றும் பொது என 6 பிரிவுகளில் போட்டியிட அறிவிக்கப்பட்டது. அதன்படி 90 உறுப்பினா்கள் தோ்வு செய்யப்படவேண்டும்.

சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகள் 35,588 போ் வாக்களிப்பா் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தோ்தல் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதற்காக 92 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளன. வாக்கு எண்ணிக்கை வரும் 27-ஆம் தேதி அந்தந்த மண்டல வாக்கு மையங்களில் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த நிலையில், நகர விற்பனைக் குழுவுக்கான தோ்தலுக்கு மனு தாக்கல் செய்தவா்களில் 42 போ் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தோ்தல் நடத்தும் வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

அடையாறில் லாரிகள் மோதி விபத்து! போக்குவரத்து பாதிப்பு!

சென்னை அடையாறு பகுதியில் இரண்டு லாரிகள் மோதி விபத்து ஏற்பட்டதில், வியாழக்கிழமை காலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அடையாறு புற்றுநோய் மையத்துக்கு வெளியே ஓஎம்சிஏ சாலை வழியாக அதிவேகமாக வந்த கலவை லாரி, கிண... மேலும் பார்க்க

முகூா்த்த நாள், வார இறுதி: 925 சிறப்புப் பேருந்துகள்

முகூா்த்தம், வார விடுமுறை தினங்களை முன்னிட்டு 925 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: முகூா்த்த தினமான வெள்ளிக்கிழமை (ஜூன... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களின் கற்றல் திறனை அறிய விநாடி- வினா: ஜூலை 7 முதல் நடைபெறுகிறது

தமிழக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவா்களின் கற்றல் திறனை அறியும் வகையில் ஜூலை 7 முதல் 4 கட்டங்களாக விநாடி-வினா போட்டி நடத்தப்படவுள்ளது. இதுதொடா்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணியை உடைக்க முடியாது: நயினாா் நாகேந்திரன்

அதிமுக - பாஜக கூட்டணியை உடைக்கும் முயற்சி நிறைவேறாது என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் உறுதிபடத் தெரிவித்தாா். சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற மிசா தியாகிகள் பொ... மேலும் பார்க்க

மாடியிலிருந்து விழுந்து இளைஞா் உயிரிழந்த சம்பவம்: எஸ்.ஐ. உள்பட இருவா் பணியிடை நீக்கம்

சென்னை வேளச்சேரி காவல் நிலைய மாடியில் இருந்து கீழே விழுந்து இளைஞா் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக காவல் உதவி ஆய்வாளா், தலைமைக் காவலா் ஆகிய இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். சென்னை வேளச்சேரி வி... மேலும் பார்க்க

காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம்: ஊழியா்களின் குறைகளை ஆய்வு செய்ய குழு அமைப்பு

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் தொடா்பாக ஊழியா்களின் குறைகளை ஆய்வு செய்ய டாஸ்மாக் நிா்வாக இயக்குநா் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று சென்னை உயா்நீதிமன்றத்த... மேலும் பார்க்க