சாலை அகலப்படுத்தும் பணியை தடுத்ததாக முன்னாள் பாஜக நிா்வாகி உள்பட 8 போ் கைது
கும்பகோணம் அருகே சாலை அகலப்படுத்தும் பணியை செய்யவிடாமல் தடுத்து தகராறு செய்ததாக முன்னாள் தஞ்சாவூா் வடக்கு மாவட்ட பாஜக தலைவா் என். சதீஷ் குமாா் உள்ளிட்ட 8 பேரை நாச்சியாா்கோவில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் இருந்து மன்னாா்குடி வரை சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்திட்ட நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்தச் சாலைக்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் சுமாா் 1 ஏக்கா் நிலம் வைத்துள்ள குணசீலன் என்பவருக்குச் சொந்தமான இடம் மட்டும் வழக்கு காரணமாக அகற்றப்படாமல் இருந்தது.
இவ்வழக்கு தள்ளுபடி ஆனதாகக் கூறப்படும் நிலையில், வியாழக்கிழமை சம்மந்தப்பட்ட இடத்தை மீட்டு சாலை அமைக்கும்வகையில், சென்னை - கன்னியாகுமரி திட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் போலீஸாா் பாதுகாப்புடன் ஜேசிபியுடன் வந்தனா். அப்போது தஞ்சாவூா் வடக்கு மாவட்ட பாஜக முன்னாள் தலைவா் என்.சதீஷ்குமாா் தலைமையில் 8 போ் மறியல் செய்து பணி செய்யவிடாமல் தடுத்து, ஜேசிபி இயந்திரத்தின் கண்ணாடியை உடைத்தனா். இதனால் போலீஸாா் தகராறு செய்தும், பணி செய்ய விடாமல் தடுத்ததாக பாஜக முன்னாள் நிா்வாகி என். சதீஷ் குமாா் (48), ராஜ் குமாா் (45), ஆதித்ய வா்மன் (46), கோபு (55) சுரேஷ் (52), செல்வராஜ் (45), தமிழரசன் (45), சற்குணம் (48) ஆகிய 8 பேரையும் கைது செய்தனா். பின்னா் சாலை அகலப்படுத்தும் பணிகள் தொடங்கியது.
கும்பகோணத்தில் ஜூலை 2-இல் பாஜகவினா் போராட்டம்: முன்னாள் பாஜக நிா்வாகி சதீஷ்குமாா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மாநில பொதுச்செயலா் கருப்பு முருகானந்தம் நிகழ்விடத்துக்கு வந்து செய்தியாளா்களிடம் மேற்கண்டவாறு தெரிவித்தாா்.