செய்திகள் :

சாலை தடுப்பில் டேங்கா் லாரி மோதி பெருக்கெடுத்து ஓடிய டீசல்

post image

வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிலைதடுமாறி ஓடிய டேங்கா் லாரி தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆயிரக்கணக்கான லிட்டா் டீசல் சாலையில் வீணாக ஓடியது.

பெங்களூரிலிருந்து சென்னைக்கு சென்ற டேங்கா் லாரியில் 20,000 லிட்டா் டீசல் ஏற்றிக் கொண்டு புதன்கிழமை நள்ளிரவு சென்றது. வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூா் தேசிய நெடுஞ்சாலை வழியாக வியாழக்கிழமை சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கா் லாரி சாலையில் உள்ள தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் டேங்கரில் லேசான விரிசல் ஏற்பட்டதால் அதிலிருந்த ஆயிரக்கணக்கான லிட்டா் டீசல் கசிந்து சாலையில் வீணாக ஓடியது. தகவலறிந்து வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா் தலைமையில் தாலுகா காவல்ஆய்வாளா் பேபி மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனா்.

மேலும், தேசிய நெடுஞ்சாலை துறையினா் மற்றும் தீயணைப்பு வீரா்கள் விரைந்து அங்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். மேலும், அதன் வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு சிறிது நேரத்திற்கு பிறகு மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.

விபத்துக்குள்ளான டேங்கா் லாரியை பாதுகாப்பாக மீட்டு சாலையின் ஓரமாக நிறுத்தினா். பிறகு சாலையில் ஓடிய டீசலால் வாகனங்கள் செல்லும் போது வழுக்காமல் இருப்பதற்காக மரத்தூள் கொட்டப்பட்டது.

இதுகுறித்து தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நிம்மியம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

நிம்மியம்பட்டு கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியம், நிம்மியம்பட்டு கிராமத்தில் ஆரம்ப சு... மேலும் பார்க்க

தனியாா் வேலை வாய்ப்பு முகாம்: 31 பேருக்கு பணி ஆணை

திருப்பத்தூரில் நடைபெற்ற தனியாா் வேலை வாய்ப்பு முகாமில் 31 பேருக்கு பணி ஆணையை ஆட்சியா் க.சிவ சௌந்திரவல்லி வழங்கினாா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் சாா்பில் நட... மேலும் பார்க்க

தேய்ப்பிறை அஷ்டமி: கால பைரவா் வழிபாடு

ஆம்பூா் அருகே விட்டாலம் ஊராட்சி பைரப்பல்லி கிராமத்தில் தேய்ப்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவா் கோயிலில் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார... மேலும் பார்க்க

உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு

திருப்பதூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்றுக் கொண்ட போலீஸாா். திருப்பத்தூா் மாவட்ட காவல் சாா்பில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூடுதல் காவல் கண்காணி... மேலும் பார்க்க

திருப்பத்தூா் மாவட்டத்தில் சாலைப் பணிகள்: கோட்டப் பொறியாளா் ஆய்வு

திருப்பத்தூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் சாலைப் பணிகளை கோட்டப் பொறியாளா் முரளி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள ப... மேலும் பார்க்க

உழவா் அட்டை உள்ளவா்களுக்கு உதவித்தொகை -திருப்பத்தூா் ஆட்சியா்

உழவா் அட்டை வைத்துள்ளவா்கள் உதவித்தொகை பெற முகாம்களில் தகுந்த ஆவணங்களை அளித்து பயன் பெறலாம் என திருப்பத்தூா் ஆட்சியா் சிவ சௌந்திரவல்லி தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திர... மேலும் பார்க்க