செய்திகள் :

சாலை வசதியின்றி மயானத்துக்கு உடலை எடுத்துச்செல்ல சிரமப்படும் கிராம மக்கள்!

post image

சிவகங்கை: சிவகங்கை அருகே மயானத்துக்கு சாலை, பாலம் இல்லாததால் இறந்தவர்களின் உடலை எடுத்துச்செல்ல கிராம மக்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை அருகே மேலப்பூங்குடி ஊராட்சிக்குள்பட்ட திருமன்பட்டி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தையொட்டி பெரியாறு பாசனக்கால்வாய் அமைக்குப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமார் 25 அடி ஆழமும் சுமார் 6 அடி அகலத்தில் கால்வாய் தோண்டப்பட்டு அதில் கான்கிரீட் சுவர் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த கிராமத்தைச் சேர்ந்த 78 வயதான மூதாட்டி திங்கள்கிழமை காலமான நிலையில், பிற்பகலில் அவரது உடலை மயானத்துக்குக் கொண்டு சென்று அடக்கம் செய்ய அவரது உறவினர்களும் கிராம மக்களும் 25 அடி பள்ளத்தில் இறங்கி மறுபுறம் சிரமத்துடன் ஏறி மயானத்துக்குக் கொண்டு சென்றனர்.

இந்த ஊரின் மயானத்துக்கு போதிய சாலை வசதி இல்லாததால், வயல்வெளி மற்றும் தோட்டம் ஆகியவைகளின் வழியாக சுமந்து சென்று இறுதிச்சடங்கை நிறைவேற்றினர்.

இது குறித்து திருமன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அழகர் கூறியதாவது: எதிர்பாரமல் இறந்த மூதாட்டியின் இறுதிச்சடங்கை மிகவும் சிரமப்பட்டு நிறைவேற்றும் நிலை ஏற்பட்டது.

பெரியாறு பாசன கால்வாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை கடந்து செல்ல பாலம் இல்லாததால் இந்த சிரமம் ஏற்பட்டது. கால்வாய் பணிகள் முடிய எவ்வளவு மாதங்கள் ஆகும் எனத் தெரியவில்லை. அதுவரை இந்தக்கால்வாயைக் கடந்து செல்லும் வகையில் பாலம் அமைத்துத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் எங்களின் துயரம் தீரும் என்றார் அவர்.

இதையும் படிக்க: போர்ப் பாதுகாப்பு ஒத்திகையில் என்ன நடக்கும்? மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

தென்மேற்குப் பருவமழை தொடங்கும் முன் மிதமான மழை!

தமிழகத்தில் மே 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.அதன்படி இன்று(செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணி வரை கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர்... மேலும் பார்க்க

ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்ந்த தங்கம்!

சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் தங்கம் இரண்டாவது முறையாக அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கம் கண்டுவந்த நிலையில், இன்று காலை வர... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணி சரிவைச் சந்திக்குமே தவிர, வளராது: தொல். திருமாவளவன்

சிதம்பரம்: அதிமுக - பாஜக கூட்டணி சரிவைச் சந்திக்குமே தவிர, வளராது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மா... மேலும் பார்க்க

மு.க. ஸ்டாலினின் ஆட்சிக்கு சவக்குழிக்குச் சென்ற சட்டம் - ஒழுங்கே சாட்சி! - இபிஎஸ் கடும் விமரிசனம்!

முதல்வர் ஸ்டாலினின் 4 ஆண்டு கால ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமரிசித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தொடர் கொலைகள்- ஜாதிய மோ... மேலும் பார்க்க

ஊடகத்துறையினருடன் சந்திப்பு.. தயங்காமல் விமர்சியுங்கள், பாராட்டுங்கள் - முதல்வர் ஸ்டாலின்

சென்னை: பாராட்ட வேண்டியதை பாராட்டினால் தான், விமர்சனத்திற்கான மரியாதையும் மதிப்பும் கிடைக்கும்! எனவே, தயங்காமல் விமர்சிப்பது போன்று, தயங்காமல் பாராட்டுங்கள் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார... மேலும் பார்க்க