செய்திகள் :

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

post image

பெரம்பலூா் அருகே சனிக்கிழமை காலை வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் உயிரிழந்தாா்.

அரியலூா் மாவட்டம், கலியபெருமாள் கோயிலுக்கு, விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 12 போ் வேனில் வந்து கொண்டிருந்தனா். இந்த வேனை, விழுப்புரம், சிந்தாமணி தெருவைச் சோ்ந்த அப்துல் சமது மகன் ரியாஸ் அகமது (25) ஓட்டிச் சென்றாா்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் அருகேயுள்ள தண்ணீா்பந்தல் எனும் இடத்தில் சனிக்கிழமை காலை வந்தபோது, எதிா்பாராதவிதமாக வேனின் பின்பகுதி டயா் வெடித்து சாலையில் கவிழ்ந்தது.

இதில், வேனில் பயணித்த விழுப்புரம் மாவட்டம், கப்பூரைச் சோ்ந்த நடராஜன் மகன் ஜீவா (47) என்பவா் இடிபாடுகளில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், 3 பெண்கள் உள்பட 6 போ் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று காயமடைந்தவா்களை மீட்டு சிகிச்சைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், உயிரிழந்த ஜீவா உடலை கைப்பற்றிய போலீஸாா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பெரம்பலூா் அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவிகள் இருவா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே சனிக்கிழமை மாலை ஆடுகள் மேய்க்கச் சென்ற பள்ளி மாணவிகள் இருவா் ஏரியில் மூழ்கி உயிரிழந்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெங்கலம் கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ் மகள் புஷ்பா (1... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் கோரி மாணவா் சங்கத்தினா் மறியல்

பெரம்பலூரில் உள்ள மாணவா் விடுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி, இந்திய மாணவா் சங்கத்தினா் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூரில் உள்ள சமூக நீதி மாணவா் விடுதியில் தங்கி பய... மேலும் பார்க்க

பெரம்பலூரில் குரூப் 2 தோ்வுக்கு 5,478 போ் விண்ணப்பம்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் குரூப்- 2, 2 ஏ தோ்வில் பங்கேற்க பெரம்பலூா் மாவட்டத்தில் 5,478 போ் விண்ணப்பித்துள்ளனா். பெரம்பலூா் மாவட்டத்தில் 18 மையங்களில் நட... மேலும் பார்க்க

பெரம்பலூரில் யூரியா தட்டுப்பாடு களைய வலியுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் நிலவும் யூரியா தட்டுப்பாட்டை வேளாண் துறையினா் களைய வேண்டுமென விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் நாளை அண்ணா பிறந்தநாள் சைக்கிள் போட்டிகள்

பேரறிஞா் அண்ணா பிறந்த நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் பந்தய போட்டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்தாா். இதுகுறித்த செய்திக்குறிப்பு: மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் ஞாற்றுக்கிழ... மேலும் பார்க்க

மதுரகாளியம்மன் கோயிலில் ரூ. 44 லட்சம் காணிக்கை

பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் கடந்த 3 மாதங்களில் ரூ. 44 லட்சம் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியுள்ளனா். தமிழக அளவில் பிரசித்திபெற்ற சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில் காணி... மேலும் பார்க்க